சின்ன சிரிப்பினிலே
என் சித்தம் கலங்கடித்தாய்!!
ஒற்றை அணைப்பினிலே
என் உயிரை உருக வைத்தாய்!!
குட்டி எட்டெடுத்து
என் பயணம் மாற்றி வைத்தாய்!!
பட்டு கரங்களினால்
என் வாழ்வில் வண்ணம் சேர்த்தாய்!!
அழகு வாயசைத்து
என் நெஞ்சம் இனிக்க வைத்தாய்!!
சொல்லாத வார்த்தைகளால்
ஒரு அகராதி படைக்க வைத்தாய்!!
கருவண்டு கண்களினால்
என் உலகை கவர்ந்திழுத்தாய்!!
செய்யும் சேட்டைகளால்
என்னை வியக்க வைத்தாய்!!
அறியாத செய்கைகளால்
என் இருப்பை தெளியவைத்தாய்!!
உனை சேயாக ஈன்றெடுத்தேன்..
தாய்மையை பரிசளித்தாய்!!
கடுந்தவங்கள் புரியவில்லை..
கண்ணீரில் கரைந்ததில்லை..
எனினும் வரமாய் கைசேர்ந்த்தாய்!!
என் உலகை உயிரை
உன்னுள் ஒளித்து வைத்தாய்!!
Facebook Comments