தேவையான பொருட்கள்
- உளுத்தம் பருப்பு – 1 1/2 கப்
- கோதுமை மா- 1 கப்
- செத்தல் மிளகாய் பொடி- 2 தே.கரண்டி
- பெருஞ்சீரகம் -1 தே .கரண்டி
- உப்பு- அளவாக
- எண்ணெய் – பொரிப்பதற்கு
- கறிவேப்பிலை- அளவாக

செய்முறை
- உளுந்தை 3 அல்லது 4 மணிநேரம் ஊற வைக்கவும்.
- அதன் பின் உளுந்தின் நீரை வடித்து விட்டு அதில் பாதியை அரைத்து எடுத்து கொள்ளவும்.
*அதனுடன் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- அதன் பின் சிறு உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் வைத்து தட்டையாக அழுத்தி மெதுவாக இலையை விட்டு பிரித்தெடுத்து கொதித்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்து பரிமாறலாம்.
(அடுப்பை மிதமான சூட்டில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும்)
Facebook Comments Box
Click to rate this post!
[Total: 0 Average: 0]