உண்ண மறந்தேன் ஆடை
உடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்
உறங்க மறந்தேன்

உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது உறைந்து நிற்கிறேன் – ஆமாம்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? – நிச்சயம் உன்னதமானதாகத்தான் இருக்கும்.

நான் இஷ்டப்பட்டுத்தான் இருத்தேன் -உன் இஷ்டமானவளாக – ஏனோ உன் நினைவு அவ்வபோது வந்து என்னை கட்டிபோடுகிறது

சொல்லி புரியவைக்க முடியுமா அலைபாயும் மனதுக்கு ஐந்தாறு திங்கள் பொறுத்திரு என் மனமே – உன் சிந்தையை ஆட்கொண்டவன் ஆகாயத்தில் பறத்துவருவன் – உன் கலி போக்க என்று!!!!

அறுவது வயதை தாண்டினாலும் – நீ ஆரத்தழுவும் போது அத்தனையும் மறந்து போகும் – உன் வயதும் கூட

மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் – உனக்கும் எனக்கும் உன்னில் பாதி நான் – ஆம் என் வயது உங்களின் அனுபவம் – ஆமாம்? எப்படி ஆட்கொண்டாய் என்னை? – புரியாத புதிராகவே இருக்கின்றது இன்னும்.

என் நாடி நரம்புகளின் மூலம் செல்களில் பாய்ந்தோடும் குருதியில் கலந்து – என் மார்பு கூட்டுக்குள் மையம் கொண்ட புயலாய் – என் எண்ண சிதறல்களில் நிலை கொண்டாய்.

ராமனின் கால் பட்டதும் கல்லும் பெண்ணானது போல் துஷ்யந்தனின் கை பட்ட மோதிரத்தால் சகுந்தலையின் வாழ்வில் ஒளி பெற்றது போல் உன் கை பட்டு எனக்குள் இருந்த – நீ சட்டன வெளிப்பட்டு – என்னில் சதுரங்கம் ஆடுகிறாய்.

காத்து இருக்கிறேன் – உன்
கைகளுக்குள் தஞ்சம் புகுந்து
தவிக்கின்ற மனதுக்கு மருந்தாக – நீ
கொடுக்கும் முத்தத்திற்காக!!!!!!!

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago