உள்ளத்தின் காதலை
உணர்த்திட எண்ணியே
உச்சிவிரலின் நுனியிலே
உதிரத்தை எடுத்தேனே
புரியாத நேரத்தில்
புதிதாக மாற்றமும்
புதிராக வந்திடுதே
புண்படுத்தி செல்கிறதே
வருத்தங்கள் சொல்லாமல்
வலிகளையும் தோற்கடித்து
உன்னோடு சேர்ந்திடவே
துடிக்குதடி என்னிதயம்
வருடங்கள் முழுவதிலும்
வந்து சென்ற சண்டையிலே
பிரிவென்ற சொல்லில்லையே
புரிந்துகொண்ட காதலிலே
உயிரே…
குழப்பத்தில் எழுதிவிட்டேன்
குருதியிலே கடிதத்தை
குப்பையிலே வீசுகின்றாய்
குழந்தையென நானும்
பழமையை மறந்துவிட்டு
பைத்தியமாய் நினைக்கின்றாய்
பதிலேதும் இல்லாமல்
பரிதவிப்பில் நானடி…
சிதைந்து போன காதலால்
சிவந்துபோன காகிதமும்
சிந்திய நுனிவிரலும்
சிரிக்கிறதடி எனை பார்த்து
கண்மணியே…
காதலெனும் வாழ்வினிலே
கண்ணீரே பரிசென்று
களவாடி சென்றுவிட்டாய்
கனவுகள் மட்டும் மிச்சமடி……
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…