உள்ளத்தின் காதலை
உணர்த்திட எண்ணியே
உச்சிவிரலின் நுனியிலே
உதிரத்தை எடுத்தேனே
புரியாத நேரத்தில்
புதிதாக மாற்றமும்
புதிராக வந்திடுதே
புண்படுத்தி செல்கிறதே
வருத்தங்கள் சொல்லாமல்
வலிகளையும் தோற்கடித்து
உன்னோடு சேர்ந்திடவே
துடிக்குதடி என்னிதயம்
வருடங்கள் முழுவதிலும்
வந்து சென்ற சண்டையிலே
பிரிவென்ற சொல்லில்லையே
புரிந்துகொண்ட காதலிலே
உயிரே…
குழப்பத்தில் எழுதிவிட்டேன்
குருதியிலே கடிதத்தை
குப்பையிலே வீசுகின்றாய்
குழந்தையென நானும்
பழமையை மறந்துவிட்டு
பைத்தியமாய் நினைக்கின்றாய்
பதிலேதும் இல்லாமல்
பரிதவிப்பில் நானடி…
சிதைந்து போன காதலால்
சிவந்துபோன காகிதமும்
சிந்திய நுனிவிரலும்
சிரிக்கிறதடி எனை பார்த்து
கண்மணியே…
காதலெனும் வாழ்வினிலே
கண்ணீரே பரிசென்று
களவாடி சென்றுவிட்டாய்
கனவுகள் மட்டும் மிச்சமடி……
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…