திருமண நிகழ்வு மகிழ்ச்சியோடு முடிந்திருக்க வாழ்த்த வந்தவர்கள் கூட்டம் வரிசையாக மணவறையில் அருகில் நின்றிருந்த மணமக்களை வாழ்த்திக்கொண்டு இருந்தனர். இரண்டு மணி நேரம் முடிந்த போது கூட்டம் சற்றே குறைந்திருந்தது.

அந்த இரண்டு மணி நேரமும் உமாவின் அருகில் நின்றிருந்தாள் பானு. தற்றே கூட்டம் குறையவும் மணமக்களை உணவு உன்ன அழைத்து சென்றனர். மணமக்கள் கூடவே பானு கதிர் திவ்யா ஈஸ்வர் இன்னும் முக்கிய உறவினர்கள் மொத்தமாக அமர்ந்து உணவு உண்ண கலகலப்பாக பந்தி நடந்து கொண்டிருந்தது.

ஈஸ்வர் திவ்யாவின் அருகில் அமர்ந்து இருந்தவன் அவளை பேச வைக்க விதவிதமாக முயற்சி செய்து கொண்டிருந்தான். திரும்பிய நேரத்தில் அவளது ஸ்வீட்டை எடுத்து உண்பது. இவனது இலையில் இருக்கும் உணவை அவளது இலைக்கு மாற்றுவது எனக்கு வம்பிழுத்து கொண்டிருந்தான்.

சிறிது நேரம் பொறுமையை கடைபிடித்தவள் கடைசியில் கோபமாக… இத பாருங்க ஈஸ்வர் இன்னோரு தரம் இத மாதிரி விளையாண்டிங்கன்னா யோசிக்காமல் அப்பா கிட்ட சொல்லி தந்திடுவேன்.

யாரோடு அப்பாகிட்ட… உன்னோட அப்பாகிட்ட தானே…

இல்லை உன்னோட அப்பாகிட்ட… தப்புன்னு அவருக்கு தோணினா பெல்டால விளாசுவாராம் அப்படியா… எனக்கு கதிர் தான் சொன்னான். உண்மையான்னு செக் பண்ணி பார்த்திடலாமா…

இவள் இப்படி சொல்லவும் கொஞ்சம் அமைதியானான். ஆனால் வெளியே அமைதியாக இருக்க மனதிற்குள் கதிரை அர்ச்சனை செய்து கொண்டு இருந்தான். துரோகி அடிவாங்கினத எல்லாம் சொல்லி வச்சிருக்கறான்.

இவனது அமைதி அவளுக்கு சிரிப்பை உண்டு பண்ண அந்த சிரிப்புடனேயே அங்கு பந்தியை கவனித்து கொண்டிருந்த ஈஸ்வரின் தந்தையை அழைத்தவள்.. அங்கிள் பாயாசம் வேணும் கொஞ்சம் எடுத்துவிட்டு வரச்சொல்லறிங்களா..

அவருக்கும் இவளை நன்றாக தெரியும் என்பதால் இதோடா இப்ப எடுத்துவிட்டு வரேன் எனக்கு நகர்ந்திருந்தார்.

அருகில் இருந்தவனால் இவளை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது.. அங்கே கதிரோ அருகில் இருந்த பானுவை மட்டுமே கவனித்து கொண்டு இருந்தான். இதை பார்த்த ஈஸ்வரோ இவன் ஆரம்பிச்சிட்டான்டா பார்க்கறதுக்கு… இனி நேரம் போறதே தெரியாதே என மனதில் நினைக்க…

தேவனோ உமாவை சீண்டியபடி உணவு உண்டுகொண்டிருந்தான் உணவு உண்டு முடிக்கவும் மறுபடியும் ஸ்டேஜில் ஏற வாழ்த்துக்கள் தெரிவிக்க மறுபடியும் உறவினர்கள் வர ஆரம்பித்தனர்.

சற்று நேரத்திற்கெல்லாம் போட்டோ சூட் போல விதவிதமாக மணமக்களை போட்டோ எடுத்து கொண்டிருந்தார் போட்டோ கிராப்பர். முன் இருக்கையில் அமர்ந்தபடி பானு இவை அணைத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள்.

ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்தவளுக்கு கதிரின் தாய் தந்தையின் கோபம் நியாயமாக பட்டது. இது போல தானே தங்களுடைய பையனுக்கும் திருமணம் முடிக்க நிணைத்து இருப்பார். தங்களுடைய அவசர முடிவு அவர்களுக்கு எவ்வளவு வருத்தத்தை தந்திருக்கும் இப்படி நினைத்தபடி இருக்க.. எதற்கோ அழைக்க வந்த மீனாவின் கைகளை பற்றியவள்…

ஸாரி அத்தை… இப்படி தான கதிரோட கல்யாணமும் நடத்தி பார்க்கணும்ன்னு நினைச்சு இருப்பிங்க… என்னாலதானே எல்லாமே நடக்காமல் போச்சு…

பைத்தியம்… என்ன பேசற பானு… நாங்களாகவே பார்த்து தேர்ந்தெடுத்து இருந்தாலும் உன்ன மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சி இருக்குமோ இருக்காதோ தெரியாது … முழு மனசோட சொல்லறேன் என்னோட பையனுக்கு உன்னை விடவும் பொறுத்தமான துணை தேடினாலும் கிடைக்காது. இதையும் அதையும் யோசிக்க கூடாது சரியா என கூறியபடி விழகி நடந்தார்.

அவர் சொல்லவும் திருப்தியாக கதிர் நின்றிருந்த இடத்தில் கதிரை பார்த்தவள் கண்களில் கூட அளவு கடந்த அன்பு, பிரியம் கண்களில் வழிந்தது. என்ன இவள் பார்வை மாற்றத்தை கவனிக்கும் நிலையில் தான் அவன் இல்லை. வந்திருந்த உறவினர்களோடு பேசி சிரித்து கொண்டிருந்தான். ஆனால் திவ்யா இவளை எளிதாக கண்டு கொண்டிருந்தாள்.

என்ன பானு மேடம் பார்வை எல்லாம் வேற மாதிரி இருக்கு… என்ன விஷயம் என அருகில் அமர … திவ்யாவிற்கு சளைத்தவளா பானு…

அப்படியா திவ்யா நானும் கேள்விபட்டேன் இன்றைக்கு சாயங்காலம் யாருக்கோ யார் கூடவோ கல்யாணம் பேச போறாங்கன்னு உண்மையா என இவளை கேட்க…

ஏய் உளரிடாத… சாயங்காலம் வரைக்கும்
ஈஸ்வரை சுத்த விடணும்ன்னு ப்ளான் பண்ணி இருக்கிறேன். அவன் என்னை தான் சுத்தரானே தவிர என்னோட அப்பாவை பார்க்கவே இல்லை. ப்ளீஸ் பானு ப்ராமிஸ் பண்ணு ஈஸ்வர்கிட்ட எதுவும் உளர மாட்டேன்னு…

ஆமாம் அவன் என்றைக்கு என்கிட்ட பேசி இருக்கறான் நீ நடத்து நான் வேடிக்கை மட்டும் பார்க்கறேன்.

தேங்க்ஸ் என இவளது கன்னத்தில் முத்தமிட்டபடி எழுந்து போக அங்கே அவளை வழி மறித்தபடி ஈஸ்வர் நின்றிருந்தான்.

பானுவுக்கு தான் கொடுப்பியா எனக்கு தர மாட்டியா என… அவனுக்கு பின்னால் அவனை பார்த்ததும் பேசுவதற்கு திவ்யாவின் தகப்பனார் வர…ஈஸ்வரின் கேள்வியில் திகைத்தபடி…. பதில் பேச தெரியாமல் திருதிருவென விழித்தாள் திவ்யா…

தொடரும்.

Facebook Comments Box
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
admin

Share
Published by
admin

Recent Posts

சதிராடும் திமிரே tamil novels

Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html

2 months ago

வெப்சைட் லிங்க்

மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…

2 months ago

எனை மீட்டும் காதலே டீசர்

  கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…

2 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 4

அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 3

அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…

4 years ago

கந்தகமாய் அவன் காதல் தமிழ் நாவல் அத்தியாயம் 2

ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…

4 years ago