அலைபேசியில்
ஆறு மணி
அலாரம்
ஆறு முறை
அலறியதும்
அலறியடித்து எழுவதற்கு பதில்
அலாரம் வைக்காமல்
அதே
ஆறு மணிக்கு எழுந்தால்
அது ஞாயிறு…..
அவசரமாக போடும்
அழகிய 2 புள்ளி கோலத்துக்கு பதில்
அட்டகாசமாக கோலம் இட்டு
ஆசையோடு நின்று ரசித்தால்
அது ஞாயிறு….
இஞ்சி டீ யின்
இனிமையை ருசிக்க எண்ணி
ஏடு படிய விட்டு
ஈ மொய்க்கும் முன்
வாய்க்குள் ஊற்றுவதற்கு பதில்
இஞ்ச் இஞ்சாக தொண்டைக்குள்
இறக்கினால்
அது ஞாயிறு…..
அழகிய கூந்தலை
அழுந்த வாரி போடும்
அடுக்குபின்னலுக்குபதில்கொண்டையாக
அள்ளி முடிந்தால்
அது ஞாயிறு…
அடுக்கு டப்பாவில்
ஆறிய சாப்பாட்டுக்கு பதில்
ஆவி பறக்க
அன்னமதை
அள்ளி உண்டால்
அது ஞாயிறு…..
கைப்பையோடு
கடைகளை
கடந்து
காய்கறி பையும்
கட்டைப்பையில் மளிகையையும்
கையில் சுமந்து
காய வேண்டிய துணிகளையும்
தேய்க்க வேண்டிய பாத்திரங்களையும்
முடிக்க வேண்டிய வேலைகளையும்
எண்ணி எண்ணி வீட்டை
வலம் வந்தால்
அது ஞாயிறு……
மாலை வந்ததும்
மறுநாளைப் பற்றிய
மலைப்பு
மனதில் வந்தால்
அது ஞாயிறு…..
வாரா வாரம்
வரும் ஞாயிறு!!!
வராது ஓய்வு!!!
பெண்களுக்கு!!!
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…