விழியிரண்டில் வேதனையை
வலியின்றி தந்துவிட்டு
புன்சிரிப்புடன் சென்றாயே
முதல் முடிவு எடுத்தவளாய்….
விரும்பிய இதயத்தில்
உறைந்ததடி இரத்தமும்
பொறுமையினை இழந்துவிட்டு
வெறுமையுடன் திரிகின்றேன்
பைத்தியமென ஊர்சொல்லி
பித்தனாய் அழைத்தேனே
தொலைந்துபோன உனையெண்ணி
தொலைதூரம் கடந்தேனே
உறவுகளை மறுத்துவிட்டு
துறவினை ஏற்றாலும்
சிந்தனையிலே நினைவுகளும்
வெந்தழலில் கொல்லுதடி
ஆசைகொண்ட புத்தரை போல
வழிதேடி அலைகின்றேன்
ஒருமுறை உனைகாண
நித்தமும் துடிகின்றேன்
காதல் கண்மணியே…
கல்லறையில் சேரும்முன்
கடைசியாய் ஒருசொல் வேண்டுமடி
காதலித்த நாட்களிலே
காதலித்தாயா என்று????
- சேதுபதி விசுவநாதன்
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…