மந்திரம் -15
தன்னை தோளோடு அணைத்தவாறு அமர்ந்திருந்த கணவனின் கையணைப்பு துஜாவை சிந்திக்க விடாமல் குழப்பியது .
நேற்றுவரை இவன் யார் ? அவளுக்கும் அவனுக்கும் என்ன பந்தம் ? மனதால் வேறொருவரனை கணமேனும் கணவனாக எண்ணி மகிழ்ந்த அவளால் எப்படி இவனை கணவனாக ஏற்க முடியும் ?
தன் விருப்பம் ஒன்றே மதியாக , அவளது உணர்வுகளை ஆசைகளை கொன்ற இவனோடு எப்படி இணைவது ?
அது அவளுக்கு அவளே செய்யும் அநியாயம் அல்லவா ?
இவனை மனதளவில் ஏற்பது கூட தவறு .
பின்பு அவன் அவளுக்கு இழைத்த அநியாயம் , நியாயம் ஆகிவிடும் .பத்து வரிகளில் கவிதை எழுதிவிட்டால் அவன் உண்மையான காதலில் கசிந்துருகியவன் என்றாகிவிடுமா ?
ஏன் இந்த கவிதைகள் கூட அவளை கவிழ்க்க அவன் கையாளும் சுதாக இருக்கலாம் ..
அவள் வரும்போது வேண்டும் என்றே ..நான் பார்க்கவேண்டும் என்றேகூட அதைவைத்து எழுதி இருக்கலாம் …இருக்கலாம் என்ன ? அப்படி தான் இருக்கும் .
மனதின் எண்ண ஓட்டங்களை துண்டிப்பது போல , அவனது மூச்சு காற்று அவளது கழுத்தை வருடி சென்றது .
தீ சுட்டார் போல விசுக்கென்ன எழுந்துவிட்டால் துஜா .
அத்தனை நேரம் தன் கைவளைவில் கட்டுண்டு கிடந்தவளின் நெருக்கம் தந்த தாக்கத்தில் , தாபத்தோடு மழையின் மாயமும் சேர்ந்துவிட …பதமாய் அவளை நெருங்கிய வசிக்கு , இந்த விலகல் கோவத்தை உண்டாக்கியது .
அவனை உஷ்ணமாய் பார்த்த துஜா , யாதொன்றும் கடிந்து கூறாது மௌனமாகவே அவ்விடம் விட்டு விலகினாள் .
ஏனெனில் , இம்முறை தவறு அவள்பாலும் உள்ளதாகவே அவளுக்கு தோன்றியது .
மனதில் அவனுக்காக பரிதாவப்பட்டதே தவறு .
அவனுக்காக பரிந்து மழையில் அவனை காக்க சென்றது அதைவிடவும் பெரிய தவறு .
கடைசியாக அவன் கையணப்பை ஏற்றது மகா பாதகம் .
எதிர்ப்பொன்றும் இல்லாமல் போகத்தானே அவனுக்கு நெருங்க தோன்றியது .
அமைதியாக சென்றவளின் பாவனையை கண்ட வசிக்கு , அவள் வேண்டும் என்றே அவனை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதாக தோன்றியது .
சுர்ரென்று மோகத்தோடு கோவமும் தலைக்கேற , அவள் கையை பற்றி இழுத்த வசி , அவளை கட்டிலில் தள்ளி தன் எண்ணத்தை நிறைவேற்ற தொடங்கினான் .
துஜாவின் போராட்டங்கள் அனைத்தையும் ஆனாக்ஷியமாக முறியடித்தவன் , முன்னேற முன்னேற துஜாவின் முகத்தோடு மனமும் கல்லாகத் தொடங்கியது .
தனது செயலில் எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் ஜடம் போல கிடந்தவளை கண்ட வசி , அவளை உதறி எழுந்துவிட்டான் .
பேசாமல் சென்று பால்கனியின் கம்பியை இறுக்கமாக பற்றிக்கொண்டு மழையை வெறித்தவனின் முதுகை துஜாவின் பார்வை துளையிட்டது .
இவனுக்கான தண்டனை என்ன ? என்ன ? என்றவள் உள்ளம் இப்போது வெகுவேகமாக சிந்திக்க தொடங்கியது .
அவளை அடையவேண்டும் என்ற ஆசையில் தானே அவன் நடந்துகொள்வது எல்லாம் …அந்த ஆசையை கருக்க வேண்டும் .
அவன் வாழ்வில் ஒட்டுண்ணி போல ஓட்டிக்கொண்டே அவனை அழிக்க வேண்டும் . எப்படி அவளது ஆசையை கொன்றானோ அதே போல அவனது ஆசையும் மக்க வேண்டும் …!!!
இவனால் அவள் குடும்பம் சந்திக்கும் அவலங்களை அவன் குடும்பமும் சந்திக்க வேண்டும் .
சில திட்டங்கள் மனதில் உருவெடுக்க தொடங்க , தனது இந்த புதிய அவதாரத்தை எண்ணி மனதின் ஒரு ஓரத்தில் மருகியவாறே …கண்முடி படுத்துகொண்டாள் துஜா .
அன்றிரவு முழுவதும் தூக்கத்தை தொலைத்தவனாய் நடை பயின்று கொண்டிருந்தான் வசி .
தனது செயலால் மேலும் மேலும் அவள் தன்னை வெறுக்குமாறு நடந்துகொள்ளும் தனது புத்தியை என்ன செய்தால் தகும் ? என்று எண்ணி எண்ணி நொந்தான் அவன் .
தனது சுயமே மாறிவிடும் அளவிற்கு இவள் என்ன மந்திரம் செய்தால் ? ஏன் நான் இப்படி ஒரு அரக்கனாக இன்று நடந்துகொண்டேன் ? இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் செல்வது ? என்னைப்பற்றி என்னவெல்லாம் மோசமாக எண்ணி இருப்பாள் ?
கடவுளே !! எனக்கு என்னதான் ஆகிவிட்டது ?
புரியாமல் மனதோடு புலம்பிக்கொண்டிருந்த வசிக்கு ஒன்று தோன்றியது .
அதை எப்படி செயல்படுத்தலாம் என்ற யோசனையோடேவே அவனும் ஊஞ்சலிலேயே அமர்ந்தபடி உறங்கிவிட்டான் .
இருவரையும் பார்த்த மழை கூட மின்னலென கண்சிம்மிட்டி இடி இடியென உரக்க சிரித்தது .
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
அத்தியாயம் 4 பெற்றவர்களிடம் விவரத்தை தெரிவித்த அபிநய வர்ஷினி அவர்களை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிடலுக்கு விரைந்தாள். அவள் பாதி தூரம்…
அத்தியாயம் 3 விடிவதற்கு இன்னும் நேரம் இருந்ததால் அறைக்குள்ளேயே நடை பழகிக் கொண்டிருந்தாள் அபிநய வர்ஷினி. ‘அவன் இங்கே வந்தது…
ஊட்டியில் இருந்த தன்னுடைய வீட்டுத் தோட்டத்தில் சால்வையை தோளில் போர்த்தியபடி இயற்கை அழகை கண்களால் பருகிக் கொண்டிருந்தாலும் அபிநய வர்ஷினியின்…