என் கண்ணம் பிடித்திழுத்து
கண் நேர்பார்த்து
கடவுள் மொழியில் கதைக்கிறாய்…
உன் உதட்டசைவிலும்
கண்ணொழியிலுமே..
கட்டுண்டு போகிறேன்..
ஏதேதோ மொழிந்து,
கை தட்டி… சிரிக்கிறாய்..
ஒன்றுமே புரியாவிட்டாலும்
உன்னுடன் சேர்ந்து நகைக்கிறேன்
உனக்கேற்ப முகபாவனைகள்
கூட்டுகிறேன்..
அதுசரி..,
என் கருத்தனைத்தும்
உன் குரலில் வியந்து..
பேசும் முயற்சியில் மகிழ்ந்து
உன் பாவனைகளில்
நெகிழ்ந்திருக்கையில்..
நீ என்ன மொழி
பேசினாலும்…
நின் கிள்ளை மொழியில்
தொலையத்தானே
போகிறேன்…
Story Link https://madhutamilnovels.blogspot.com/p/blog-page_22.html
மக்களே, இனி என்னுடைய கதைகள் என்னுடைய பிளாகில் பதிவு செய்யப்படும். வோர்ட்பிரஸ் தளத்தில் அடிக்கடி ஒரே பிரச்சினை மீண்டும் மீண்டும்…
கண் விழித்ததும் சீதா முதலில் கண்டது தரையில் படுத்திருந்த தனக்கு மேலே தண்டால் எடுத்து உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த…
“தம்பி ஏதோ முக்கியமான வேலைன்னு வெளியே போய் இருக்காரு மா.. சீக்கிரம் வந்திடுவார்.. பயப்பட வேண்டாம். தம்பி இல்லாத நேரமாவே…
“வாயிலேயே போடுவேன்... அந்த வீட்டுக்கு மருமகளா போகப் போற.. இனி எப்பவும் அவங்க வீட்டு ஆட்கள் எல்லாரையும் மரியாதையா பேசணும்…
தீண்டாத தீ நீயே.... சில துளிகள் “சார்..அந்தப் பொண்ணு..அதான் வானதி மேடம் உங்களுக்கு முக்கியமானவங்கன்னு தெரிஞ்சு தானே அவன் கடத்தி…