Page 1 of 1

கீதா கோவிந்தம் சில வரிகள்...

Posted: Sat Jun 06, 2020 11:54 am
by Sujin Soundar Rajan
கீதா கோவிந்தம்...

ஒரு வார்த்தை சொல்லாடி பெண்ணே,
உன் இதயத்தில் கலந்திட வரவா...
உன் முடி காற்றினில் அசைய,
என் மனம் கலையுதே…

உன் கண்ணில் கரையும் மையால்,
என் உயிரும் கரைந்தே போக...
என் சுவாச மூச்சும் நீயே,
நான் உன் சுவாசம் ஆகிடவா...
நீ என்ன என்னைக் கொல்லும் தேவதையா - இருந்தும்
நான் உன்னை வணங்கும் பக்தனா…

நித்தம் நித்தம் உந்தன் நினைவே,
இதயத்தை இதயத்தைக் கொல்கிறதே...
உன்னில் என்னை நானும் தேடியே,
என் இதயம் தொலைகிறதே…


வால் துண்டு:
"Inkem Inkem Kavale" பாடல் இசையின் உத்வேகத்தால் உருவான சில வரிகள் இவை...