மாலை -34
பாடல் வரிகள்
வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ
பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ
பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ
பூமி பார்க்கும் வானமே புள்ளியாக தேய்ந்து போ
பாவயில்லை பாவை தேவையென்ன தேவை
ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை
முள்ளோடு தான் முத்தங்களா சொல் சொல்.....
மங்கையின் மனமோ வேதனையில் வாடியது.விக்ரம் சாருவை அவர்களது அறைக்கு அழைத்துச் சென்ற நாளிலிருந்து மங்கையின்ன் மனம் ஒரு நிலையில் இல்லை . உண்மையில் விக்ரம் சாருவை அவர்களது அறைக்கு அழைத்துச் செல்லவே இல்லை.தன் தந்தையிடம் இந்த விஷயத்தை மறைப்பது தவறு என்று மனதில் தோன்றியது விக்ரமிற்கு. எனவே தந்தையிடம் இதைப் பற்றிக் கூறிவிட்டு சமையல்காரம்மா நீலாவை சாருவுடன் கெஸ்ட் ரூமில் தங்க வைத்திருந்தான். இது எதுவும் அறியாத மங்கை அதை நினைத்து வருத்திக் கொண்டு இருந்தாள். கமிஷனர் விக்ரமை அழைத்து விக்ரம் நீயும் கார்த்திக் தமிழ்நாட்டிற்கு சிறப்பு போதை தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கீறீர்கள். இருவரும் பொறுப்பேற்றுக் கொள்ளும் முன் போதை மருந்து கடத்தல் பற்றிய முழு அறிக்கையை தயார் செய்து கொள்ளுங்கள்.அதை நீங்கள் உள்துறை செயலாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் பொறுப்பேற்ற பின் இதை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் உஷார் ஆகி விடுவார்கள். இந்த விஷயம் உங்களை தவிர வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். ஏனென்றால் நம்மில் சிலரே அவர்களுக்கு துணை போகின்றனர் . உனக்கு மிகவும் நம்பிக்கையான ஆட்களை மட்டும் இந்த வேலைக்கு பயன்படுத்திக் கொள் என்று கூறினார்.
ஓகே சார் அப்படியே செய்கிறேன் என்றான் விக்ரம்.
விக்ரமிற்கு அலுவலகத்தில் அவனுடைய அன்றாட வேலைகள் சரியாய் போகவே வீட்டிற்கு வந்து புதிய வேலை பார்ப்பதால் தூங்குவதற்கு நீண்ட நேரம் ஆகிவிட்டது . அவன் வரும் முன் அவன் மனைவி தூங்கியிருப்பாள்.இரட்டை குழந்தைகள் என்பதால் வயிறு சற்று பெரியதாக இருந்தது.இரவின் ஒளியில், தாய்மையின் மெருகொடு சிறுபிள்ளை யென் தூங்குபவளை கண்கொட்டாமல் பார்த்து கொண்டு இருப்பான். எந்தவித ஒப்பனையுமில்லாமலே ரதி போல் இருக்கிறாயே டி என் செல்ல குட்டி என்று அவளுக்கு வலிக்காமல் தன் நெற்றியால் அவளின் நெற்றியில் முட்டி முத்தமிட்டு பின்னிருந்து அணைத்துக் கொண்டு உறங்குவான்.வேலையின் காரணமாக அவள் எழும் முன்பே அவனின் ஸ்டடி ரூமிற்கு சென்றுவிடுவான்.
மங்கை உண்ணும் மாத்திரைகளாலும், உடல் அசதியிலும் நன்றாக தூங்கி விடுவாதால் விக்ரம் இவளறைக்கு வருவதே தெரியாமல் போனது.
மங்கையோ சாரு இங்க வந்து போனதிலிருந்து விக்ரம் தன்னை விட்டு விலகி இருப்பதாக எண்ணி குழம்பி நின்றாள். விக்ரமை கண்ணால் பார்ப்பதே அரிதாக இருந்தது.
அம்பிகா தன் மருமகளுக்கு வேளா வேளைக்கு சாப்பாடு பழம் மாத்திரை கொடுத்து வந்தார்.விக்ரமும் அவரிடம் இதுபற்றி பேசி இருந்தான். என்ன தான் பார்த்து கொண்டாலும் மங்கையின் முகத்தில் தெளிவில்லை. அதை எண்ணி கவலை கொண்டார் அம்பிகா.
இதுபற்றி தன் மகனிடம் கூறினார் புள்ளதாச்சி பொண்ணு கணவருடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.நீ உன்னுடைய வேலையை கொஞ்சம் குறைத்துக் கொண்டு அவளுடன் கொஞ்ச நேரம் செலவிட்டால் நன்றாக இருக்கும் என்று கூறினார் .
கண்டிப்பாக அம்மா .இந்த வேலை ஒரு பத்து பதினைந்து நாட்களில் முடிந்துவிடும் அதன் பிறகு நான் அவள் அருகில் இருந்தே பார்த்து கொள்கிறேன் சரியா என்று தன் தாயை சமாதானப்படுத்தி விடை பெற்றுச் சென்றான் விக்ரம்.
வேலை பளுவின் காரணமாக அம்பிகாவை மங்கையை செக்கப்பிற்கு அழைத்துச் சென்று வர சொன்னான் விக்ரம்.அங்கு சாருவும் தன் தாயுடன் ஹாஸ்பிடலுக்கு வந்திருந்தாள்.
சாரு பார்க்க முற்றிலும் மாறி மாறிப் போயிருந்தாள். முகம் ஒளியிழந்து, களையிழந்து சோர்ந்து காணப்பட்டது என்னாச்சு சாரு என்று கேட்டதற்கு அவரிடமிருந்து ஒரு விரக்தி புன்னகையே பதிலாக கிடைத்தது மங்கைக்கு. அதற்கு மேல் மங்கையால் எதுவுமே பேச முடியவில்லை .
அம்பிகா சாரூவிடமுமா அவளின் தாயரிடமும் சில வார்த்தைகள் பேசிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.
மங்கையினுள்ளே ஏதோ எண்ணங்கள் தோன்றிக் அவளை வதைத்துக் கொண்டிருந்தது.
விக்ரமின் விலகலுக்கும், சாருவின் வாட்டத்திற்கும் தான் தான் காரணமோ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அன்று இரவு எப்போதும் போல பல வேலைகளை முடித்து விட்டு மிகவும் தாமதமாக ஒரு மணியளவில் மங்கையின் அறைக்கு வந்தான் விக்ரம் .அங்கே மாத்திரையின் உதவியால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தாள் அவன் மனைவி. அவளை ரசித்துக்கொண்டிருந்தவன் தூங்கிக் கொண்டிருந்தவளின் சேலையை விலக்கி மேடிட்டிருந்த வயிற்றில் கை வைத்தான். தன் தந்தையின் வரவை உணர்ந்தோ என்னவோ அவனின் குழந்தைகள் வயிற்றில் இருந்து அசைந்து தங்களின் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்.அந்த ஷனத்தில் உலகையே வென்று விட்ட உணர்வு வந்தது மனதில். பின் தன் தங்க மங்கையின் வயிற்றில் முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை தன் பிள்ளைகளுக்கு தெரிவித்தான். தன் உயிரைத் தாங்கும் தன் காதல் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான்.பின் அவளின் அருகிலேயே படுத்து தூங்கி விட்டான் வழக்கம்போலவே.
விக்ரமும் கார்த்திக்கும் சேர்ந்து கமிஷனர் கூறியபடி போதை மருந்து பற்றிய விவரங்களையும் சேகரித்து ஓர் அறிக்கை தயார் கமிஷனரிடம் கொடுத்தனர்.
அதன் பின் பொறுப்பேற்க இன்னும் பத்து நாட்கள் இருந்த நிலையில் தன் மனைவிடன் அந்த நாட்களை கழிக்க எண்ணி கார்த்திகிடம் அந்த கொலை பற்றிய விவரங்களை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு தன் மனைவியுடன் நேரம் செலவழிக்க தொடங்கினான்.
காலை உணவிற்கு பின் மனைவிக்கு ஜூஸ் மற்றும் மாத்திரை கொடுத்து ரெஸ்ட் எடுக்க சொல்லி விட்டு தன் பணிக்கு செல்வான்.மாலையில் சின்னதாக வாக் கூட்டிச்செல்வான். இரவுணவிற்கு பின் வெதுவெதுப்பான நீரில் குளிக்க வைத்து அவளின் வீக்கமான கால்களில் தைலம் தேய்த்து விடுவான்.தன் கணவனின் அன்பிலும் அக்கறையில் மகிழ்ந்தாலும் இத்தனை நாட்கள் இல்லாத அக்கறை இப்போது என்ன திடீரென்று? ஏதேதோ எண்ணங்களும் கர்ப்பகாலத்தில் ஏற்படும் மூட் ஸ்விங்னால் மங்கையின் முகம் குழப்பத்திலும் கலக்கத்திலும் இருந்தது. அதை விக்ரம் கண்டுகொண்டான். அவனுக்கு காரணம் தெரியவில்லை.அவளிடம் கேட்டாலும் அப்படி எல்லாம் ஒன்றுமில்லை என்று பதிலளித்தாள்.
ஒருநாள் இதைப்பற்றி கார்த்திக்கிடம் சொல்லி கொண்டு இருந்தான் விக்ரம் என்னன்னு தெரியல கார்த்திக் மங்கை மகிழ்ச்சியாகவே இல்லை எதையோ நினைத்து கலங்குகிறாளா என்று தெரியவில்லை.
ஒருவேளை மங்கைக்கு தன் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் என்று நினைக்கிதோ என்னவோ. இந்த மாதிரி நேரங்களில் பெண்கள் தன் தாயிடம் இருக்க விரும்புவார்கள் என்றான் கார்த்திக் .
நிஜமாகவா என்றான் விக்ரம்.
விக்ரமிற்கு மங்கையை அவளின் அம்மா வீட்டிற்கு அனுப்ப மனமில்லை அவளை விட்டு தன்னால் பிரிந்திருக்க முடியாது என்று என்னினான். அதனாலேயே சந்தேகமாக கேட்டான் கார்த்திக்கிடம் .
கார்த்திக்கோ கடுப்பாக நீதான்டா கலை கர்ப்பமாக இருக்கும் போது இங்கு வந்து கூட்டிட்டு போன. அப்புறம் நீங்க கலையை மாதக்கணக்கில் உங்க வீட்ல வைச்சுகிட்டிங்க.என் பொண்டாட்டிய என்கிட்ட இருந்து பிரிச்சல்ல.பாரு மங்கையும் அவங்க அம்மா வீட்டிற்கு போறேன் சொல்லுவா என்றான்.
தான் கூறுவது பின்னாளில் நடக்கப் போவதை அறியாமல் விளையாட்டாக அவ்வாறு கூறினான் கார்த்திக்.
டேய் கார்த்திக் சாபம் விடாதே. இல்லைனா மறுபடியும் மேகிய என் பட்டூஸ இங்கே கூட்டிட்டு வந்துடுவேன் என்று மிரட்டினான்.
போய் உன் பொண்டாட்டிய சந்தோஷ படுத்த சொன்னா ஏன்டா என் பொண்டாட்டிய பிரிக்க பாக்குற என்றான் வருத்தமாக.
பின் இருவரும் வேலையை பற்றி பேசி விட்டு போனை வைத்தனர்.
மங்கையின் அறைக்கு வந்த விக்ரம் வழக்கம்போலவே அவள் குளித்துவிட்டு வந்தவுடன் அவள் கால்களுக்கு தைலம் தேய்த்து விட்டு நீ விரும்பினால் உன் அம்மா வீட்டுக்கு போய் கொஞ்ச நாள் இருந்துவிட்டு வாம்மா என்றான்.
விக்ரம் திடீரென இப்படி கேட்கவும் அவன் கேட்டதன் அர்த்தம் விளங்காமல் இவர் என்னுடைய அம்மா வீட்டிற்கு போக விருப்பமா என்று கேட்கிறாரா இல்லை நீ உன் அம்மா வீட்டிற்கு போ என்று மறைமுகமாகக் கூறுகிறாரா என்று புலம்பினாள் மங்கை.
மங்கையிடம் பதில் ஏதும் வராமல் இருக்க என்ன அம்மா என்றான் பரிவாக
வளைகாப்பு போட்ட பின் நான் அம்மா வீட்டிற்கு போய் இருந்து கொள்கிறேன் என்றார் மங்கை.
சந்தோஷம் டா சாமி.எங்கே அம்மா வீட்டுக்கு போறேன்னு சொல்லி விடுவாளோ என்று உள்ளுக்குள் பயந்து கொண்டிருந்தான் விக்ரம். வளைகாப்பு போட்டு அனுப்பி விட்டு ஒரு பத்து நாட்கள் அங்கு இருந்த பின் தங்கள் வீட்டிற்கே அழைத்து வந்துவிடலாம் என்று எண்ணினான் அதை தன் தாயிடமும் கூறியிருந்தான் .
தலைப் பிரசவம் தாய் வீட்டில் தான் நடைபெற வேண்டும் என்று சொல்வார்கள் . மங்கையும் ஒரே பெண்.தங்கள் வீட்டில் கொஞ்ச நாட்களேனும் வைத்து கொள்ள அவளின் பெற்றோரும் நினைப்பார்கள் தானே.எதற்கும் அவர்களிடம் பேசிவிட்டு முடிவு செய்யலாம்.குழந்தை பிறந்ததும் சீக்கிரமாகவே நம் வீட்டிற்கு அழைத்துக் கொள்ளலாம் என்று கூறினார் அம்பிகா.
சரிமா என்றான் அரை மனதாக.
மங்கை அவளுடைய கல்லூரியில் மார்க் ஷீட் தருவதால் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்று கூறினாள் விக்ரமிடம்.
அவனுக்கு முக்கியமான மீட்டிங் இருந்தது .அதனால் அவன் தந்தை முரளிதரனிடம். அப்பா நீங்கள் மங்கையை கூட்டிக் கொண்டு காலேஜ் செல்லுங்கள் .கார்ட்ஸ் அழைத்துக் கொள்ளுங்கள் பத்திரமாக போய் வாருங்கள் என்றான்.
விக்ரமிற்கு என்ன தோன்றியதோ தன்னுடைய அறையிலிருந்த மனைவியை இலேசாக அணைத்து முத்தமிட்டான்.பத்திரம் சரியா என்று கூறி வெளியே வந்தான்.
ஏனோ விக்ரமிற்கு மனது சரியாகவே இல்லை.மனைவி அனுப்ப மனமில்லை. மார்க் ஷீட் வாங்க வேண்டும் என்று தான் அனுப்பினான்.
கல்லூரிக்கு சென்று தேவையான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். கவி,மதி மற்றும் அனைவரும் வந்து மங்கையை ஒட்டிக்கொண்டிருந்தார்கள் .
அவர்களின் அலுவலகத்தில் தரக்கட்டுப்பாடு சோதனை நடந்து கொண்டிருந்தது. அதற்கு முரளிதரன் இருந்தாக வேண்டிய கட்டாயம் எனவே மங்கையை அழைத்து சொல்லி விட்டுச் பத்திரமாக இரு நானே வந்து அழைத்து செல்கிறேன் கார்ட்டஸ் இங்கு இருக்கட்டும் என்று கூறினார்.
மாமா நான் இங்கு பாதுகாப்பாகக் தான் இருக்கிறேன் நீங்கள் உங்களுடன் கார்ட்ஸை அழைத்துச் செல்லுங்கள் என்று கூறிவிட்டாள்.
சரி இங்கேயே இருமா கிளம்பும் போது எனக்கு போன் செய் என்று கூறிவிட்டு அலுவலகம் சென்று விட்டார் முரளிதரன். இதில் அவர் செய்த தவறு தான் அலுவலகம் செல்வதைப் பற்றி விக்ரமிடம் கூறாமல் இருந்ததுதான் .
தன்னுடைய அறையில் இருந்தவனுக்கோ ஏதோ தவறாக நடக்க போவதாக தோன்றிக் கொண்டே இருந்தது. ஒரு தெரியாத நம்பரிலிருந்து ஒரு விடியோ வரந்தது .அதை ஓபன் செய்து பார்த்த போது மங்கை ஒரு நாற்காலியோடு சேர்த்து கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் மயக்கமாக இருந்தாள். அதில் பேசியவன் மங்கையை கடத்தி இருப்பதாக கூறினான்.
ஆம் மங்கை கடத்தப்பட்டு இருந்தாள்.
மாலை தொடுக்கப்படும்...
வணக்கம் நண்பர்களே
கதையை பற்றிய உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்..
கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
என்றும் அன்புடன்
உங்கள் தோழி லக்ஷ்மி தேவி.
மாலை சூடும் வேளை-34
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு