Page 1 of 1

சாரல் 9

Posted: Wed Feb 24, 2021 3:34 pm
by Sutheeksha eswar
சாரல் 9














தன் முன்னே பரந்து, விரிந்த அந்த பங்களாவின் பிரம்மாண்டமான வாயிற் கதவையே, ஒரு வித கோவத்தோடும், சலிப்புடனும் பார்த்துக் கொண்டு இருந்தான்,

முகுந்தன்.



அந்த வீட்டினுள் செல்லவே அவனுக்கு சிறு துளியும் விருப்பம் இல்லாது போக, தன்னை இந்த நிலையில் கொண்டு வந்தவரின் மீது அளவில்லாது ஆத்திரம் வெள்ளம் வந்த நதியை போல கரை புரண்டு ஓடியது.



அவன் முகுந்தன். இன்றைய 90’ஸ் கிட்ஸ்களின் பெற்றோரை போலவே மகன் இன்ஜினியரிங் படித்தால் முன்னேறிவிடுவான் என்ற

இன்றைய சாரி சாரி அன்றைய 90‘ ஸ் கிட்ஸ்களின் பெற்றோரின் புல்டோசர் விட்டு கூட அசைக்க முடியாத நம்பிக்கையினால், அவனது தந்தை அவனை எப்படியாவது இன்ஜினியரிங் சேர்க்க வேண்டும் என்று தலை கீழாக கூட நின்று பார்க்க, ம்ஹும் அவரை தலையால் தண்ணீர் குடிக்க வைத்து, தனக்கு பிடித்த கேட்டரிங் பிரிவில் சேர்ந்து அவரின் வெறுப்பை சம்பாதித்து கொண்டான்.



படிப்பே அவருக்கு பிடிக்காதது ஆக இருக்க, அதில் தான் வேலை செய்வேன் என பிடிவாதம் பிடித்து எப்படியோ தந்தையின் திட்டுக்களில் இருந்து தப்பிப்பதற்காக, நானும் ரவுடி தான் என்கிற மாதிரி தானும்

வேலைக்கு சென்னையில் சேர்ந்து விட்டான்.



வயது 26. பார்க்க, நம்ம குக்கு வித் கோமாளி அஷ்வின் குமார் மாதிரி இருப்பவன்.



காலையில் அலாரம் அடித்தும் எழாமல், அதனை அடித்து வைத்து விட்டு ஒரு அரை மணி சேர்ந்து தூங்கியதினால், அரக்க பறக்க எழுந்து சாவகாசமாக கிளம்பி கொண்டு இருந்தான்.



கண்ணாடி முன் நின்று கொண்டு, தலையை சீவுகிறேன் பேர்வழி என்று முன்னும் பின்னும் ரொம்ப நேரம் சீவி விட்டு கொண்டு,

பின் ஒரு வழியாக சீவி முடித்து அழகு பார்த்து, பின் அதனை கலைத்து விட்டு,



“அழகன்டா முகுந்தா நீ!” என தன்னையே கொஞ்சி கொண்டு, அந்த கண்ணாடியே மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளலாமா என நினைத்தது தான் குறை என்ற அளவுக்கு அதனை படுத்தி எடுத்து கொண்டு இருந்தவனின் கவனத்தை கலைத்தது அவனது அலைபேசி.



அதில் அவ்வளவு நேரம் “யாரவது என்ன காப்பாத்துங்களேன்!” என்ற அதனின் அபய குரல் கேட்டது கடவுளுக்கு கேட்டது போல



அதில் அவனது கவனம் தடை பட, “அப்பாடா ஒரு வழியா தப்பிச்சோம்” என்று பெரு மூச்சு வெளியிட்டது அந்த கண்ணாடி.



அலை பேசி அவன் வருவதற்குள், ஒரு முறை முழுதாக அழைத்து ஓய, அதனை எடுத்து பார்த்தவனின் கண்ணில் பட்டது ஏகப்பட்ட மிஸ்டு கால்கள், அதில் ஏன் இத்தனை கால்கள் என்று புருவம் சுருக்கி பார்த்தவன், எதுவும் எமர்ஜென்சியாக இருக்குமோ என்ற பரபரப்பு தோன்ற உடனடியாக அதற்கு அழைப்பு விடுத்தான்.



மறுமுனை எடுக்க தாமதித்த அந்த ஒரு நொடியும், அவன் மனம் எங்கெங்கோ சுத்தி அலை பாய, எடுத்த மறுநொடியே

“அம்மா” என்ற தாயை காணாத சேயாய் கலக்கத்தை சுமந்து ஒலித்தது அவன் குரல்.



“அ..ம்..மா! அம்மா உங்..க..ளுக்கு உங்களுக்கு ஒன்னும் இல்லையே!”

“பாட்டி பாட்டி எதாவது, எப்படி இருக்காங்க!” என்று பதட்டோடு விசாரிக்க,



மறுமுனையில் மகனின் கலக்கமான குரலில் பதறியவர், அது தங்களுக்கானது என்று நிம்மதியில் கீற்று போன்ற புன்னகை வந்து அமர்ந்தது, அவரது உதட்டில்.



அதற்குள் அவன் அம்மா அம்மா என்று பல முறை அழைத்து கொண்டு இருக்க,

“ந்தா! எனக்கென்ன நான் குத்து கல்லு மாதிரி நல்ல தான் இருக்கேன், இந்த கட்டை அவ்வளவு சீக்கரம் சாயாது இது வைரம் பாஞ்ச கட்டைலே!”





“என்ன கண்டா ஆத்தாளுக்கும் மகனுக்கும் எப்படி இருக்கு நல்ல இருக்குறவள சீக்கரம் சாய்க்க பாக்குறீங்களா?” என பேரனிருக்கு பதில் சொன்னவர்,



“எங்கோ கெடந்து புள்ள என்னமோ ஏதோனு போன போட்டா நீ என்னடானா வாயில கொள்ளுக்கட்டை வச்சவ மாதிரி நின்னுகிட்டே கனவு காணுறவ!” என்ற மாமியார் கல்யாணியின் அதட்டலில், தன் நிலை மீண்டார் கீதா.



அதில் இவ்வளவு நேரம் பட படவென யாருக்கு என்னவோ என்று பயந்து கொண்டு இருந்தவன் தனது பாட்டியின் குரலில் தான் யாருக்கும் எதுவும் இல்லை என நிம்மதி பெருமூச்சு விட்டவன்,



பின் தனது தாயை தனது பாட்டியே ஆனாலும் அதட்டுவதா என்று தோன்ற,

“ஏ பாட்டி! நான் பக்கத்துல இல்லன்ற தைரியமா எங்க அம்மாவை எதாவது பேசுன அப்பறம் பாரு அந்த வாய தெறக்கவே முடியாத மாதிரி கம் வச்சு அடைச்சுடுவேன் என்று அவன் இங்கே கத்த



உடனே மகனை அன்னையாய் “என்ன பேசுற முகுந்த் இப்டி தான் பெரியவங்கள பேசுறதா நான் இப்படி தான் உன்ன வளர்த்து

இருக்கேன்னா?” என அவர் கண்டிக்க.

“நீ என்னடா புதுசா கம்மு வாங்கி ஒட்டுறது நீ செஞ்ச சமையல்ல சாப்பிட்டாலே அப்படி தான் வாய் தானா ஒட்டிக்கும்!” என அவனை வம்பிலுக்க,



“இங்க பாரு கெழவி எங்க அம்மாகாக தான் உன்ன சும்மா விடுறேன் இன்னொரு தடவை என்னோட தொழில பத்தி எதாவது சொன்ன அவ்ளோ தான் சொல்லிட்டேன் ஆமா!” என அவன் எண்ணெயில் பட்ட தண்ணீர் துளி போல அவன் வெடிக்க,



“போடா! போடா! பொழப்பத்த பயலே நேத்து மொளச்ச சுண்டக்காய் பய நீ என்ன மிரட்டுறியா?”



“நீ என்ன மண்ணுக்குள போன உங்க தாத்தனே என்ன கண்டு பயப்படுவாரு” என

அவனிடன் சிலிர்த்துவிட்டு,



“எனக்கும் என் பேரனுக்கும் ஆயிரம் இருக்கும் அதுல நீ தலை இடாதே!” என மருமகளையும் ஒரு கொட்டு வைக்க,



“சரி! சரி! உங்க பஞ்சாயத்தை அப்புறம் வச்சுகோங்க எனக்கு நேரம் ஆச்சு!” என்றவன்



“எதுக்கு மா போன்

பண்ணினே?” என அவன் அப்போது தான் ஞாபகம்



வந்தவனாக போன் செய்த காரணத்தை கேட்க, “அ..து.. அது வ..ந்..து.. வந்து” என அவர் இழுக்க,



“என்ன மா என்ன விஷயம் சொல்லுங்க!” என்று அவன் அன்னையின் குரலில் பேதம் உணர்ந்தாலும், அவர் வாயில் இருந்தே வருவது வரட்டும் என அவன் அவரிடம் போட்டு வாங்க,



“என்ன இன்னும் வந்து போயின்னு இழுத்துகிட்டு இருக்குறவ



சட்டு புட்டு னு விஷயத்தை சொல்லுரத விட்டுப் புட்டு, இன்னும் ஜவ்வு மாதிரி இழுக்கற!”

என அவர் மேலும் சொல்ல “மா என்ன மா முக்கியம் இல்லனா நான் சாயங்காலம் வந்து பேசவா!” என அவன் அழைப்பை துண்டிக்க போக,



“கண்ணா! கண்ணா! இல்ல இல்ல வச்சுராத அது வந்து



“அட என்ன இன்னும் சொல்லி முடிக்காம அவன் தான் சோலிக்கு நேரம் ஆகுதுன்னு சொல்றான்ல!



அவன் கிட்ட என்ன தயக்கம்

உன்னோட உடன் பொறந்தவள போய் பார்த்துட்டு வா கண்ணு னு சொன்னா சரிங்க அம்மா னு சொல்லிட்டு ஒரு எட்டு போய் அவள பார்த்துட்டு வர போறான்!” என அவர் பட்டென விஷயத்தை போட்டு உடைக்க,



மாமியாரின் அதிரடி தெரிந்தும் அவரின் முன்னே தயங்கிய தனது மடத்தனத்தை நொந்துகொண்டே மகன் என்ன சொல்வானோ என ஒரு புறம் பயம் இருந்தாலும்,



மகனது மனநிலையை கண்டு கொண்டு மெதுவாக ஆற அமர சொல்லி இருக்கலாம் என ஒரு புறம் நினைத்துக் கொண்டு இருந்தார் மனதில்





அதில் இவ்வளவு நேரம் இருந்த இலகு தன்மை மாறி வந்து முகத்தில் ஒரு இறுக்கம் கொண்டி கொண்டது.

தனது பாட்டி இப்படி சொன்னதும் சில நினைவுகள் தொடர்வண்டி போல நொடிகளில் அவன் மனக் கண்ணில் ஓடி மறைந்தது.





என்ன முயன்றும் சில நினைவுகள் தரும் காயங்கள் நாட்கள் சென்றாலும், மறக்க முடிவதில்லை.



அது உள்ளுக்குள்ளே “முனு முனு”வென ஒரு வலியை கொடுத்து கொண்டு தான் இருக்கும்.



என்ன தான் அன்னையின் செல்லப் பிள்ளையாக இருந்தாலும், “அது மட்டும் என்னால முடியாது இத பத்தி பேசுறதா இருந்தா என்கிட்டே நீங்க மேற்கொண்டு பேச வேணாம் எனக்கு நேரமாச்சு நான் அப்புறம் பேசுறேன்.”



என அவன் மறுபுறம் இருந்த அன்னையுடன் சொல்லி வைத்து விட்டாலும், பிறகு நேரம் ஆவது உணர்ந்து,



பிறகு பேசிக்கொள்ளலாம் என நினைத்து ஒரு பெருமூச்சுடன்

கிளம்பினாலும் முன்பு இருந்த அந்த சந்தோசமும் துள்ளலும் அவனிடம் இருந்து விடை பெற்று வெகு தூரம் சென்று இருந்தது.



வண்டியில் போகும் வழி எங்கும் அதனை பற்றியே யோசித்து கொண்டே வந்தவன், தன் நினைவு அற்று போக, சாலையில் கவனம்

இல்லாது இருந்தவன், முன்னே ஒரு வண்டி சடன் பிரேக் போட்டு நிற்க,



அதில் இருந்தவரோ, “என்ன நினைப்புல யா வண்டி ஓட்டிட்டு வர நீ கண்ண என்ன பொடனிலையா வச்சுட்டு வர, குறுக்க வண்டி வர்றது தெரியலையோ



நினைப்ப இங்க வச்சுட்டு ஓட்டுங்கையா” என அவர் சர மாறியாக திட்டிவிட்டு செல்ல,



இவன் தான் ஆத்திரம் கண்ணை மறைக்க, தன் கோவம் கொஞ்சமும் குறையாமல் வண்டியை ஓங்கி ஒரு தட்டு தட்டினான்.



அதில் சாலையில் போவோர் வருவோர் எல்லாம் அவனையே பார்க்க, சிறிது நேரம் களைத்து சுயத்திற்கு வந்தவன் பிறகு தான் சுற்றும் முற்றும் கவனித்து விட்டு தனது வாகனத்தை கிளப்பிக்கொண்டு சென்றான்.



முகுந்தனை நித்தமும் சுடும் அந்த நினைவுகள் தான் என்ன???



சாரல் அடிக்கும்...

Re: சாரல் 9

Posted: Thu Oct 28, 2021 6:49 pm
by NJS
Ithoda next epi eppo pa poduveenga??? Story supera irukku....

Re: சாரல் 9

Posted: Thu Oct 28, 2021 7:39 pm
by Sutheeksha eswar
Ungaluku intha story pidichathu la romba santhosam sis. Itha 8 months ah stop pani vachu iruken. Apo health issues irunthathaal, story ah continue seiya mudiyala.

Apram continuation vittu pochu. Ongoing story mudichutu itha poduren sis.

Re: சாரல் 9

Posted: Sat Oct 30, 2021 6:18 am
by NJS
Ok pa .... Tc....

Re: சாரல் 9

Posted: Mon May 30, 2022 4:05 pm
by NJS
Hii frnd.... How are you? Are you ok now?!!!

Re: சாரல் 9

Posted: Thu Jul 21, 2022 7:29 pm
by NJS
Hiii pa how are you??? Are you fine pa?

Re: சாரல் 9

Posted: Sun Sep 04, 2022 10:13 am
by Sutheeksha eswar
NJS wrote:
Thu Jul 21, 2022 7:29 pm
Hiii pa how are you??? Are you fine pa?
Hi sis sorry sis. Nan unga msg ye pakkala. Manichukkonga sis. Parthu iruntha kandippa reply seithu irupen. Inaiku saaral next ud poduren sis. Virupam iruntha padichu paarunga sis. Sorry for the late reply

Re: சாரல் 9

Posted: Sun Sep 04, 2022 10:15 am
by Sutheeksha eswar
NJS wrote:
Mon May 30, 2022 4:05 pm
Hii frnd.... How are you? Are you ok now?!!!
Hi sis nan nalla irukken sis. Ennai marakama visarichathuku romba nandri sis. Konjam paiyan noda busy aahiten sis. Athan intha pakkam vara mudiyama pochu. Athan nenga msg seithathe enaku theriyalai. Sorry sis.