மாலை-25
பாடல் வரிகள்
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே
ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே
மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு
மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு
மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்
தினம் தினமும் வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து
வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு
காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்
விக்ரம் திட்டியதும் தங்கள் அறைக்கு வந்த மங்கைக்கு தூங்கிக்கொண்டு இருக்கும் போது விக்ரம் முத்தமிட்டது சற்று மங்கலாக நினைவு வந்தது .அதை நினைத்துவளுக்கு கனவுதான் போல என்று நினைத்தாள். அந்த நாள் முதல் மங்கை விக்ரமிற்கு தேவையானதை செய்தாலும் அவனை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை.அவருடைய நேசத்தை சம்பாதிக்க விட்டாலும் வெறுக்குமாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். இதில் விக்ரம் தான் அவளின் அருகாமைக்கு ஏங்கினான். எவ்வாறு மங்கையை சமாதானப்படுத்துவது என்று விக்ரமும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று மங்கையும் விலகி இருந்தனர். இவ்வாறாக நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துகொண்டிருந்தது.
இதற்கிடையில் விஜய் வந்து விட்டான். இருவருடைய குடும்பத்திலும் பேசி மலரோடு திருமணத்திற்கு சம்மதம் பெற்று விட்டான் . இன்னும் பத்து நாட்களில் திருமணத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். மங்கை செமஸ்டர் லீவில் இருந்ததால் மலரின் திருமணத்திற்கு அனைத்து உதவிகளும் செய்தாள். திருமண பட்டு எடுப்பதற்கு நீங்கள் இளையவர்களாய் போய் எடுத்து வாருங்கள் உங்கள் விருப்பப்படி. நாங்கள் வேறு எதற்கு என்று கூறிவிட்டனர் பெரியவர்கள். அதன்படி மணிமேகலை கார்த்திக் விஜய் மலர்விழி விஜயின் அக்கா, மாமா, மங்கையின் தோழிகள் காவியா, மதி, மதி அத்தை மகன் கதிர், விஜயின் நண்பன் அசோக் மற்றும் மங்கை செல்வதாக ஏற்பாடு செய்திருந்தனர் விக்ரமுக்கு வேலை இருப்பதால் வரவில்லை என்று முன்னரே கூறிவிட்டான். அங்கே துணிக்கடையில் அனைவரும் தத்தம் துணையோடு துணிகளை பார்வையிட்டுக் கொண்டிருந்தனர் .காவியா கூட விஜய் ஆனந்த் நண்பன் அசோகுடன் சேர்ந்து கொண்டு அனைவரையும் கலாய்த்துக் கொண்டிருந்தாள்.தனியாக இருந்தது என்னவோ மங்கை தான் வெளியில் சொல்லாவிட்டாலும் மங்கையின் மனம் விக்ரமை நினைத்து ஏங்கியது. முதலில் மலர் மங்கையுடன் தான் புடவைகளை பார்த்து கொண்டிருந்தாள் .பின்னர் மலரிடம் அக்கா நீங்கள் விஜய் மாமாவுடன் சேர்ந்து புடவையை செலக்ட் பண்ணுங்கள் நான் எனக்கு செலக்ட் செய்கிறேன் என்று அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு அவள் தனியாக வந்து விட்டாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கார்த்திக் விக்ரமிற்கு அழைத்துப் பேசினான்.
கமிஷனர் அலுவலகத்தில் இருந்த விக்ரம் கார்த்திக்கின் போனையைப் பார்த்ததும் ஒரு நிமிஷம் சார் என்று கமிஷனரிடம் சொல்லிவிட்டு போனை எடுத்து பேசினான்.
இந்த பக்கம் என்ன சொன்னானோ கார்த்திக், கார்த்திக் நான் இன்னும் பத்து நிமிடத்தில் அங்கே இருப்பேன் சரிதானா. ஆனால் அவளிடம் எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறி போனை வைத்துவிட்டான்.
பின்னர் அவரிடம் வந்து சார் எனக்கு அரை நாள் விடுமுறை வேண்டும் இதை நாளை பார்த்து கொள்ளலாமா என்று அனுமதி கேட்டான் .
அப்படி என்ன முக்கியமான வேலை.மருமகளை பார்க்க போக வேண்டுமா என்றார் கமிஷனர் விளையாட்டாக.ஒகே மை பாய் நீ கிளம்பு.நாளை பார்க்கலாம்.
இல்லை அங்கிள்.மலரின் திருமணத்திற்கான வேலை உள்ளது என்று கூறி அங்கிருந்து கிளம்பி வந்தான்.
விக்ரம் சொன்னபடியே பத்து நிமிடத்தில் கார்த்திக் சொன்ன துணிக்கடைக்கு வந்துவிட்டான் .
ஏனோதானோவென்று ஒரு புடவையை பார்த்துக்கொண்டிருந்த மங்கையின் தோளில் வந்து கை போட்டான். மங்கை திடீரென யாரோ கை வைக்கவும் பதறி விலகியதை அடுத்து அவளை தன் கை வளைவிலேயே வைத்துக் கொண்டான் விக்ரம் .
அந்த நேரம் அவளுக்கு அந்த நெருக்கம் தேவைப்பட்டது போலும் அவளும் விலகவில்லை .
மங்கையின் நிறத்திற்கு எடுப்பாக மரகதப் பச்சை நிறத்தில் ஒரு பட்டுப்புடவையை தேர்ந்தெடுத்தான். பின் அவளை அழைத்துக்கொண்டு மேல்தளத்தில் உள்ள நகைக்கடைக்கு சென்று அந்த பட்டுப் புடவைக்கு மேட்சாக நெக்லஸ்,காதணிகளும் வளையிலும் வாங்கினான். விலை கிட்டத்தட்ட எட்டு லட்ச ரூபாய்க்கு மேல் வந்து விட்டது .
இப்போது எதற்கு இதெல்லாம் என்றவளை தன் பார்வையால் அடக்கினான் .அவளும் மறுப்பேதும் கூறாமல் வாங்கிக்கொண்டாள் .
ஏனோ அவளுக்கு வாங்கி கொடுக்க வேண்டும் என்று தோன்றியதால் தான் வாங்கினான்.ஆனால் தன்னை திட்டியதால் சமாதானப்படுத்துவதற்காக வாங்கிக் கொடுத்துள்ளார் காதலால் அல்ல என்று மனதில் நினைத்து கொண்டாள்.
நடக்கவே நடக்காது என்று எண்ணியிருந்த தன்னுடையவனுடனான திருமணம் நிச்சயமான சந்தோஷத்தில் மனம் பூரித்திருந்தால் மலர்விழி.
இவ்வளவு எளிதில் தன் வீட்டில் சம்மதம் கிடைக்கும் என்று எண்ணவில்லை விஜய்.
விஜய் ஆனந்தும் மலர்விழியும் வண்ண வண்ண கல்யாணக் கனவுகளில் மூழ்கியிருந்தனர் . போனிலேயே தங்கள் காதல் பயிரை வளர்த்து வந்தனர்.
அன்று புடவை எடுக்கச் சென்று வந்தபின் மங்கையும் விக்ரமும் ஓரளவு சகஜமாக பேசத் தொடங்கியிருந்தனர்.
எல்லோரும் எதிர்பார்த்த திருமண நாளும் வந்தது. வெளிநாட்டில் ஜிவல்லரி பேஷன் டிசைனில் ஒரு கோர்ஸ் படித்து முடித்துவிட்டு ஆறு மாதங்களுக்கு பின் இப்போது தான் சாரு கோவை வந்தாள்.தற்போது மலரின் திருமணத்திற்கு வந்திருந்தாள்.
சாரு விக்ரமிடம் என்னடா எங்கள் வீட்டில் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்க சொல்லி இருந்தா நீ அதை பற்றி கொஞ்சம் கூட கவலைபடாமல் சத்தமில்லாமல் உன் திருமணத்தை முடித்துக் கொண்டாய்.உன்னை நம்பித்தானே டா நான் வெளிநாடு சொல்றேன் நீ என்னை இப்படி ஏமாற்றி விட்டாயே விக்ரம் என்றாள்.
இல்லை சாரும்மா நீ இருந்தாலாவது நான் உங்கள் வீட்டில் பேச முயற்சித்து இருந்திருப்பேன் .நீயும் இல்லாமல் நான் என்னவென்று போராடுவது .அதுவும் உன் பாட்டியை பார்த்தாலே எனக்கு வார்த்தைகள் வரமாட்டேன் என்கிறது நான் என்ன செய்ய ? என்று பதிலுரைத்தான் விக்ரம்.
எது எப்படியோ நீ என்னை விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டாய்.
தன் நண்பனின் திருமணத்தில் தான் இல்லாமல் போய் விட்டோமே என்ற ஆதங்கத்தில் தான் அவ்வாறு சாரு கூறினாள்.
இல்லை சாரு அது வேறு சில காரணங்களுக்காக சீக்கிரம் செய்ய வேண்டியதாய் போயிற்று என்று அவளை சமாதானப்படுத்தினான் விக்ரம் .
விக்ரமை காணவந்த மங்கை இதையெல்லாம் அரைகுறையாக கேட்க நேர்ந்தது. அவளின் மனதில் பல்வேறு எண்ணங்கள் தோன்றி மறைந்தது .
பின் மலரிடம் சென்று சாரு யார் மலரக்கா என்று கேட்டாள்.
அந்த சாருவா எங்களின் குடும்பம் நண்பரின் மகள் .நான் கூட விக்ரம் மாமா அவளை தான் காதலிக்கிறார் என்று நினைத்தேன். நல்லவேளை அவர் உன்னை விரும்பி திருமணம் செய்து கொண்டார். நல்ல பெண் தான் ஆனால் கொஞ்சம் திமிரும் உண்டு என்று கடுப்பாக கூறினாள்.
மலருக்கு விக்ரம் தங்களைவிட சாருவுடன் நெருக்கமாக பழகுவது பிடிக்காது .சிறுபிள்ளைத்தனமான பொறாமை உணர்வு உண்டு.
இதை அறிந்த சாருவும் அவ்வப்போது மலரை சீண்டிக் கொண்டே இருப்பாள்
அதனால்தான் மலர் மங்கையிடம் அவ்வாறு கூறினார்.
ஆனால் இதையெல்லாம் கேட்ட மங்கைக்கு ஒருவேளை அவர் சாருவை தான் விரும்பி இருப்பாரோ.அவர் இல்லாத காரணத்தால் என்னை மணந்து கொள்ள நேரிட்டதோ என்று பலவாறு எண்ணி கலங்கி கொண்டிருந்தாள்.
இந்தக் குழப்பத்தில் விக்ரமின் இரசனையான பார்வையை கவனிக்கத் தவறினாள்.மங்கை எங்கு சென்றாலும் விக்ரமின் பார்வை காதலாய் அவளை வருடிச் சென்றது .
இதைக் கண்டு கொண்ட கார்த்திக் என்னடா டீன் ஏஜ் பையன் மாதிரி அதுவும் மனைவியின் பின்னாடி சுற்றிக் கொண்டு இருக்கிறாய் என்று கேலியாக கேட்டான். அதற்கு பதில் ஏதும் கூறாமல் ஒரு புன்னகையை மட்டுமே சிந்தினான்.
சரி எப்போது ஜூனியர்யை ரிலீஸ் செய்ய போகிறாய் என்று கேட்டான் கார்த்திக்.
முதலில் பரீட்சை எழுத வேண்டும் நண்பா பின்புதான் ரிசல்ட் பற்றி யோசிக்க முடியும் என்றான் புதிராக.
என்னடா கூறுகிறாய் என்று இழுத்தான் கார்த்திக் .
ஆமாம் கார்த்திக் மங்கையின் படிப்பு முடிய வேண்டும் என்று காத்திருக்கிறேன் அவள் படிப்பு முடிந்ததும் தான் வாழ்க்கையை தொடங்க வேண்டும் .
அதெல்லாம் சரிதான் ஆனால் அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்க வேண்டும் பார்த்து நடந்துகொள்.
இன்னும் மூன்று மாதம் தானே பார்த்து கொள்ளலாம் என்றான் விக்ரம்.
இன்னும் மூன்று மாதத்தில் என்னென்னவோ நடக்கவிருப்பதையறியாமல்
பார்த்தாயா விக்ரம் , விஜய்யை இன்னும் திருமணமே ஆகவில்லை அதற்குள் குல்லுமணாலிக்கு ஹனிமூனுககு டிக்கெட் போட்டு விட்டான். நானும் உன்னுடைய வயது தான் .பார் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை ஆகிவிட்டேன். ஆனால் நீ இன்னும் உன் மனைவியை தான் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று விக்ரமை வம்பிழுத்தான் கார்த்திக்.
உனக்கு என்னப்பா அழகான பெண் ரெடியா இருந்தது.எனவே சீக்கிரமாகவே திருமணம் செய்து கொண்டாய் என்றான் விக்ரம் .
பெண் ரெடியா இருந்தது என்று வேண்டுமானால் சொல் ஆனால் உன் தங்கை என்பதற்காக அழகான பெண் என்றெல்லாம் கூறக்கூடாது என்றான் கார்த்திக் .
இரு இதை மேகியிடம் போய்
சொல்கிறேன் என்றான் விக்ரம் பதிலுக்கு.
டேய் விக்ரம் போய் உன் மனைவியை கரெக்ட் பண்ணும் வேலையை பார்ப்பாயா. அதை விடுத்து என் மனைவியிடம் போட்டு கொடுக்கிறேன் என்கிறாயே சிறு பிள்ளை போல் என்று அவனை அங்கிருந்து அனுப்பி வைத்தான் கார்த்திக்.
விக்ரமும் மங்கையும் தான் மூத்த தம்பதிகளாய் எல்லா திருமண சடங்குகளிலும் மலருக்கும் ஆனந்திற்கும் உதவி செய்தனர் .
நல்ல முகூர்த்த நேரத்தில் விஜய் மலரின் சங்கு கழுத்தில் மங்கல நாணை பூட்டி தன்னில் சரிபாதியாக அவளை ஏற்றுக்கொண்டான்.
திருமணம் முடிந்து மலர்விழி தன் வீட்டில் இருந்து விஜய்யின் இல்லத்திற்கு கிளம்பினாள்.அவள் கிளம்பிய பின் ராகவனை பூரணி அழைத்தார்.
நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்கு புரிகிறது பூரிமா .ஆனால் வேண்டாம் விட்டுவிடு .மேலும் நாம் வருத்தப்பட்டால் அங்கே மலரால் நிம்மதியாக இருக்க முடியாது.நடந்து முடிந்தது முடிந்ததாகவே இருக்கட்டும் . மேலும் அதைப் பற்றி பேசி வருத்தப்பட வேண்டாம் என்று முடித்துவிட்டார். என்னதான் அவ்வாறு கூறினாலும் ராகவனின் கண்களும் கலங்கி தான் இருந்தது.
பூரணி, ராகவனின் கலக்கத்திற்கு காரணம் என்ன?
மாலை சூடும் வேளை-25
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு