மாலை -16
பாடல் வரிகள்
நிலவை உரசும் மேகம்
அந்த நினைவை நினைத்தே உருகாதா
உயிரை பருகும் காதல்
அது ஒரு நாள் உனையும் பருகாதா
நீ முடிந்த பூவிலொரு இதழாய்
வாழ்ந்து விட்டு போவதற்கு நினைத்தேன்
நீ நடந்த மண்ணெடுத்து சிலனாள்
சந்தனத்தின் வாசம் அதில் முகர்ந்தேன்
நிழல் தீண்டும் போதிலும்
மனதோடு வேர்க்கிறேன்......
முரளிதரன் தன் பேரப் பிள்ளைகளை அழைக்க தன் மகள் வீட்டிற்கு சென்றார் அங்கு அபி ஹாலில் அமர்ந்து தன் அன்னையின் போனில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தாள். தன் தாத்தாவை கண்டதும் தாத்தா என்று ஓடிப் போய் அவருடைய காலை கட்டிக்கொண்டாள்.
முரளிதரன் தன் பேத்தியை தூக்கி தன் மடியில் வைத்துக் கொண்டு சோபாவில் அமர்ந்தார் .
என்ன செய்யறீங்க குட்டி அபிமா.
தாத்தா செல் ல மாமா வந்தாங்க அப்புறம் மாமா டும்னு சூட் பண்ணாங்க.
என்னடா என்ன சொல்கிறாய் அபி?
இந்த பாருங்க என்று மலர் மேகலாவிற்கு அனுப்பியிருந்த வீடியோவை காண்பித்தாள்.
ஆம் மலர் அன்று சக்திக்கல்லூரியில் எடுத்த வீடியோவை வாட்ஸ் அப்பில் அனுப்பி இருந்தாள். முரளிதரன் வீடியோ பார்த்து முடிப்பதற்கும் மேகலா தன் மகனை ரெடி பண்ணி மாடியில் இருந்து கீழே இறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது..
சாப்பிட சொன்ன மகளிடம் வேண்டாம் கொஞ்ச நேரம் ஆகட்டும் சரி நேரம் கிடைக்கிறபோது வீட்டுக்கு வா ஒரே ஊரில் இருந்து வர மாட்டேங்குற என்று உன் அம்மா ஒரே புலம்பல் .
இந்த வாரம் எப்படியாவது அவரை கூட்டிட்டுப் வீட்டுக்கு வரேன் என்றாள் மேகலா.
தன் பேரன் பேத்திகளை அழைத்துக்கொண்டு தன் வீடு வந்து சேர்ந்தார் முரளிதரன். பிள்ளைகளை தன் மனைவிடம் விட்டு விட்டு தன் அறைக்கு சென்ற அவருக்கு தன் மகனைப் பற்றி யோசனையாய் இருந்தது. மலரை திருமணம் செய்துகொள்ள கேட்டதற்கு இதுவரை அவன் பதில் கூறவில்லை .வேறு ஏதும் விருப்பமா என்றால் அதற்கும் இல்லை என்கிறான் .அந்த பாலா கூறியது சனிப்பிரதோஷத்தன்று கோவில் பிரசாதத்தை கேட்டபோது விக்ரம் கோவிலில் பார்த்த பெண்ணிடம் அதை கொடுத்து விட்டதாக அவர்கள் வீட்டில் வேலை செய்யும் சாமிநாதன் கூறினார் .
முரளிதரன் ஒன்றும் மகன் ஒரு பெண்ணுடன் பழகினாலே அவளை காதலிப்பதாக என்னும் அளவு பழமைவாதி கிடையாது .ஆனால் அந்த வீடியோ அதில் அந்தப் பெண்ணை காப்பாற்றும் போது விக்ரமின் கண்களில் கடமை உணர்வையும் தாண்டி ஏதோ ஒன்று இருப்பதாக தோன்றியது .அவன் விருப்பத்திற்கு யாரும் மறுப்பேதும் சொல்ல போவதில்லை என்று தெரிந்தும் ஏன் மறைக்கிறான். இன்று வரட்டும் அவனிடம் இது பற்றி பேசிவிட வேண்டும் என்று எண்ணினார் முரளிதரன்.
தன் பட்டுகளைப் பார்ப்பதற்காக கொஞ்சம் நேரம் ஆகவே வீடு வந்து சேர்ந்தான் விக்ரம். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான்.
விக்ரம் அவர்கள் இருவரும் தூங்கியதும் என் ஆபிஸ் ரூமுக்கு வா உன்னிடம் பேசவேண்டும் அம்மாவிடம் ஏதும் சொல்ல வேண்டாம் என்றார் முரளிதரன்.
விக்ரமும் பிள்ளைகள் உறங்கியபின் தன் தந்தையை காண அவருடைய ஆபீசு ரூமிற்கு சென்றான்.
என்னப்பா ஏதும் முக்கியமான விஷயமா?
மலருக்கும் உனக்கும் திருமணம் முடித்து விடலாம் என்று இருக்கிறேன்?
இல்லப்பா நான் கொஞ்சம் என்று விக்ரம் சொல்லும்போதே..
இன்று எனக்கு உன்னுடைய உறுதியான முடிவு தெரிய வேண்டும் என்றார் முரளிதரன் .
பின் அவனிடம் அந்த வீடியோ மற்றும் தான் தனக்கு தெரிந்த விவரங்களை கூறினார். உனக்கு அந்த பெண்ணை தான் பிடித்திருக்கிறது என்றால் அதை சொல்வதற்கு என்ன தயக்கம். எங்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சி தானே முக்கியம் ஒருவேளை மலரை நினைத்து வருத்தப்படுகிறாயா தம்பி?
இதற்கு என்ன சொல்வது என்றே விக்ரமிற்கு தெரியவில்லை. உண்மையில் அவன் மங்கையை விரும்புகிறானா என்றால் அதற்கு விக்ரமிடம் பதில் இல்லை .மங்கையே விக்ரமிற்கு பிடித்திருந்தது ஆனால் என்று விக்ரம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே
உனக்குப் பிடித்திருந்தால் சொல் விக்ரம் ராகவனிடம் நான் பேசுகிறேன் மலருக்கு வேறு திருமண ஏற்பாடு செய்யலாம் .
அவனுடைய வாய் தானகவே ஆமாம்பா எனக்கு மங்கையை பிடித்திருக்கிறது இருவரும் விரும்புகிறோம் இப்போதுதான் ஒரு மூன்று மாதங்களாக .இத்தனை நாள் நான் ஒன்றும் சொல்லாமல் இப்போது போய் எப்படி மலரை வேண்டாம் என்று சொல்வது என்ற தயக்கம் இருந்ததால் நான் சொல்லவில்லை.சாரி பா .
ராகவன் அப்படி ஏதும் நினைத்து கொள்ளமாட்டான். உன்னையும் அவன் பிள்ளை போலத்தான் நினைக்கிறான். அதனால் கவலைப்படாதே. முதலில் மலருக்கு மணம் முடித்து விடலாம். ராகவனிடம் கூறி வேறு மாப்பிள்ளை பார்க்கனும். பின் உனக்கு மங்கைக்கும் திருமணம் செய்வோம்.
இல்லபா அவ இன்னும் ஒரு வருடம் படிப்பை முடிக்க வேண்டும் பிறகு பார்க்கலாம் .
பின் விஐய்ஆனந்தைப் பற்றி கூறினான்.
அந்த குடும்பத்து பையனா ?ராகவன் என்ன சொல்வானோ சரி மலர் என்ன சொல்கிறாள் ?
அப்பாவின் முடிவு தான் என்னுடைய முடிவு என்கிறாள். விஜய் நம்ம மலர் மேல ரொம்ப பிரியமாயிருக்கிறார் ப்பா.
சரிப்பா விக்ரம்.நான் ராகவனிடம் பேசுகிறேன் .உன் அம்மாவின் தாத்தாவிற்கும் அவனுடைய தாத்தாவிற்கும் ஏதோ சிறு கருத்து வேறுபாடு தான் ஆனால் இதில் நடுவில் இருந்தவர்கள் ஊதி பெரிதாக்கி விட்டனர் இன்னமும் அதையே பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லை இத்திருமணத்தில் மூலமாக இரு குடும்பங்களும் இணையட்டும் என்று தன் சம்மதத்தை தெரிவித்தார் முரளிதரன்.
வேண்டாம்பா இப்போது விஜய் பற்றி மட்டும் சொல்வோம் குடும்பம் பற்றி எதுவும் கூற வேண்டாம் .ஒருவேளை குடும்பத்தை பற்றி கேட்டவுடன் பிடிக்காமல் போய் வேறு வரன் பார்த்து விட்டால் என்ன செய்வது முதலில் விஜய் வரட்டும் மாமா அவனை பார்த்து பேசி பிடித்து விட்டால் பின்பு அவன் குடும்பத்தைப் பற்றிக் கூறலாம். அப்போதுதான் அவரை நம்மால் சமாளிக்க இயலும் .கண்டிப்பாக விஜய் அவர் மனதை மாற்றி விடுவான்.
இதையெல்லாம் தெரிந்து கொண்டுதான் மங்கையை விரும்பியுள்ளாய். சரி மருமகள் குடும்பத்தை பற்றி சொல் என்று கேட்டார் முரளிதரன்.
திருதிருவென விழித்தான் விக்ரம். தெரிந்தால்தானே சொல்வதற்கு.
அதற்குள் அங்கு வந்த அம்பிகா என்ன ரகசியம் இந்த நேரத்தில் பேசுறீங்க அப்பாவும் பிள்ளையும்?
முரளிதரன் அனைத்தையும் அவரிடம் கூறினார்.
ஒரு நாள் மருமகளை இங்கு அழைத்து வா பார்க்கணும் போல இருக்கு என்று மறைமுகமாக தன் சம்மதத்தை தெரிவித்தார் அம்பிகா.
அம்மா திருமணத்திற்கு முன் அப்படி எல்லாம் நம் வீட்டிற்கு அழைத்து வரமுடியாது அவள் வீட்டில் தெரிந்தால் என்னவாகும் அவங்க அப்பா வேற ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என்று சும்மா அளந்து விட்டான் மகன்.
கோவிலுக்கு மட்டும் நீ அழைத்துக் கொண்டு போலாமா என்று சிரித்தார் அம்பிகா.
அம்மா அது தற்செயலாக நடந்தது என்று சினுங்கினான் மைந்தன்.
நம்பிட்டேன் நம்பிட்டேன்.சரி
அவள் ஹாஸ்டலுக்காவது கூட்டிட்டு போ நான் என் மருமகளை பார்த்து கொள்கிறேன்.
சரிமா எனக்கு தூக்கம் வருது என்று கூறி தன் அறைக்கு சென்று விட்டான். ஆனால் அங்கு சென்றதும் விக்ரமிற்கு தூக்கம்தான் வரமாட்டேன் என்றது. உண்மையில் தான் மங்கையை விரும்புகிறோமா அதனால்தான் அப்பாவிடம் அப்படி கூறினோமா இல்லை இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக அப்படி சொன்னேனா என்று தனக்குள்ளேயே விவாதித்துக் கொண்டிருந்தான்.என்னதான் சமாளிக்க முடியாத பிரச்சனை என்றாலும் ஒரு பெண்ணை விரும்புவதாக அவனால் அவன் தந்தையிடம் சும்மா கூட கூற முடியாது. இதில் இருந்தே தெரிந்தது விக்ரமிற்கு அது தன் மனதில் இருந்து வந்த வார்த்தை என்று .
முதலில் மங்கையை பார்த்து இந்த விஷயத்தைக் கூற வேண்டும் அவள் சம்மதம் இல்லாமல் நான் என் வீட்டில் கூறிவிட்டேன். நாளையே அவளைப் பார்த்து பேசி விட வேண்டும்.
மறுநாள் காலையில் பாலாவிடம் இருந்து மங்கையின் நம்பர் வாங்கி மங்கைக்கு அழைத்துப் பேசினான்.
ஹலோ மங்கை நான் விக்ரம் பேசுகிறேன் .
விக்ரம் ஹலோ சொன்னவுடனே அது தன்னவனின் குரல் என்று கண்டுகொண்டால் பெண்ணவள். விக்ரமை பார்க்கவேண்டும் என்று தவித்து கொண்டிருந்தவளுக்கு ஆடவனின் குரல் கேட்டதும் மகிழ்ச்சியாய் இருந்தது
முயன்று வருவித்துக் கொண்ட சாதாரண குரலில் சொல்லுங்க சார் என்றாள்.
நான் உன்னிடம் சற்று தனியாக பேச வேண்டும் உன்னால் வர முடியுமா மங்கை.
சார் நான் செமஸ்டர் எக்ஸாம் முடிந்து விடுமுறைக்காக வீட்டிற்கு கிளம்பி கொண்டு இருக்கிறேன் நீங்கள் பஸ் ஸ்டாண்ட் வந்து விடுங்கள் அங்கு பார்த்து பேசிக் கொள்ளலாம்.
தான் அவனை பார்க்க வேண்டும் என்று நினைத்த உடனே அதற்கு வழி செய்து கடவுளுக்கு நன்றி கூறினாள் மங்கை. அதே போல அவளுடைய காதலும் கைகூடினால் நன்றாக இருக்கும்.அதற்காக கடவுளிடம் மனதில் வேண்டிக் கொண்டாள்.
இறைவன் மங்கையின் வேண்டுதலை ஏற்பாரா?
இல்லை மங்கை அது சரிவராது. நான் உன்னை ஹாஸ்டலில் வந்து பிக்கப் செய்து கொள்கிறேன். பின்பு நாம் இருவரும் பேசி முடித்ததும் உன்னை பஸ்ஸ்டாண்டில் விட்டுவிடுகிறேன் சரிதானா என்றான் விக்ரம்.
சரி சார் என்று விட்டு போனை வைத்தாள் எதற்காக அழைத்திருக்கிறார் என்று யோசித்தவாறே காத்துக் கொண்டிருந்தால் மங்கை விக்ரமினை காணப் போகும் ஆவலோடு.
தன்னுடைய ஆதவனைக் கண்டதால் மங்கையின் முகம் மலர்ந்திருந்தது. மங்கை அழைத்துக்கொண்டு விக்ரம் தங்களுடைய அபி ஃபார்ம் ஹவுஸ் க்கு சென்றான்.
அங்கு மங்கையிடம் தன் வீட்டில் நடந்தவற்றை கூறினான்.
சாரி மங்கை இந்த பிரச்சினையை எப்படி ஷால்வ் பண்றதுன்னு தெரியல. அதனாலதான் அப்பா அப்படி கேட்டதும் நாம ரெண்டு பேரும் பேரும் விரும்புறோம்னு சொல்லிட்டேன். உன்னிடம் கேட்காமல் அப்படி கூறியது தவறுதான். என்னை மன்னித்துக்கொள் .
அவன் கூறியதைக் கேட்டதும் மங்கள்யால் நம்பமுடியவில்லை விக்ரம் தன்னை விரும்புகிறாரா என்று அவள் மனம் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது .ஆனால் அது சில நிமிடங்களே.
கொஞ்ச நாட்கள்தான் மங்கை பின்பு விஜய் மலர் திருமணம் முடியவும் என்ன செய்வது என்று பார்க்கலாம் . நான் உன்னை விரும்புகிறேன் என்று கூறியதால் தான் அத்தை வேறு வரன் பார்க்கவே ஒத்துக்கொண்டார் இல்லையெனில் எப்படியாவது மலரை எனக்கு திருமணம் செய்து வைக்க முயற்சிப்பார். அவர்கள் மேல் குற்றமில்லை மலரை வேறு இடத்திற்கு அனுப்ப அத்தைக்கு கொஞ்சம் தயக்கம். என்ன மங்கை பதிலே காணோம் .
ஆக அவன் தன்னை விரும்புவதாகக் வீட்டினரிடம் கூறியது மலர் உடனான திருமணத்தில் இருந்து தப்பிப்பதற்காகவே மற்றபடி மங்கையர் மேல் விக்ரமிற்கு காதல் இல்லை என்று அவள் நினைத்துக் கொண்டாள் .
ஆனால் விக்ரமோ திடீரென படித்துக்கொண்டிருக்கும் பெண்ணிடம் வந்து உன்னை காதலிக்கிறேன் என்று சொல்ல தயக்கமாக உணர்ந்தான் அதுவும் இப்படிப்பட்ட இக்கட்டான நிலையில் . ஒருவேளை இந்த பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காக தான் அவளை காதலிப்பதாக கூறுவதாக எண்ணி விட்டால் என்று எண்ணியே தன் காதலைப் பற்றி மங்கையிடம் கூறாமல் விட்டான். அவளுடைய மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொண்டு அப்புறம் தன்னுடைய விருப்பத்தை தெரிவிக்கலாம் என்று எண்ணியிருந்தான் .
ஒருவேளை விக்ரம் அப்போது அவளிடம் தன் காதலை தெரிவித்து இருந்திருந்தால் பின்னாளில் வரும் பல பிரச்சனைகளை தவிர்த்திருந்திருக்கலாம்.
ஆனால் நடப்பதை மாற்ற யாரால் முடியும்..
மங்கைக்கு கண்ணீர் கண்களில் முட்டிக் கொண்டு வந்தது அதை விக்ரம் அறியாமல் உள்ளிழுத்துக் கொண்டு பரவாயில்ல சார் ஒரு நல்லதுக்காக தான சொல்லி இருக்கீங்க எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லை .
எனக்கு தெரியும் மங்கை என்னை நீ புரிந்து கொள்வாய் என்று. இதுதான் எனக்கு உன்னிடம் பிடித்த விஷயமே சரி கிளம்பலாமா ?
விக்ரம் மங்கை அழைத்துக்கொண்டு பஸ் ஸ்டாண்டில் சென்று இறக்கி விட்டான் அங்கு அவளுக்கு மதுரை செல்லும் ஏசி பஸ்ஸில் டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து பஸ் கிளம்பும் வரை இருந்து அனுப்பி வைத்தான்.
பத்திரமாக செல் மங்கை வீட்டிற்கு சென்றதும் போன் செய்து எனக்கு தெரியப்படுத்து என்றான் விக்ரம்.
பேருந்து நகரவும் இவ்வளவு நேரம் அடக்கி வைத்துக் கொண்டிருந்த கண்ணீர் மடைதிறந்த வெள்ளமாய் கண்களில் வழிந்தது . விக்ரமின் அக்கறையில் மணல் நெகிழ்வதற்கு பதிலாக வலித்தது.இதை காலம் முழுவதும் அனுபவிக்க தனக்கு கொடுத்து வைக்கவில்லையே என்று ஏங்கினாள்.
இங்கு மங்கையை ஊருக்கு அனுப்பி வைத்த விக்ரமின் மனமோ அலைபாய்ந்தது .விக்ரம் மங்கையை நேரில் பார்ப்பதில்லை தான். ஆனால் அவள் அவன் அருகிலேயே இருக்கிறாள் என்ற நினைப்பே நிம்மதியை தந்தது .அவள் ஊருக்கு செல்லவும் தான் தன்னுயிர் தன்னை விட்டு பிரிவதை போல உணர்ந்தான் அப்போதுதான் விக்ரமிற்கு புரிந்தது தான் எந்த அளவு மங்கையை விரும்புகிறோம் என்று.
சொல்லாத காதல் சொர்க்கத்தில் மட்டுமல்ல எதிலுமே சேராது....
இவர்களின் சொல்லாத காதல் எதில் சென்று முடிகிறது என்று பார்ப்போம்
Hi friends
Please share your valuable comments..
Thank for ur support.
Regard s
Laxmidevi
மாலை சூடும் வேளை-16
Jump to
- Tamil Novels
- ↳ Madhumathi Bharath
- ↳ சதிராடும் திமிரே (காதல் கதகளி பார்ட் 2)
- ↳ கந்தகமாய் அவன் காதல்
- ↳ நெருஞ்சியின் நேசம்
- ↳ எனை மீட்பாயோ காதலியே
- ↳ காதலே நீ கானலா
- ↳ Kindle EBook links
- ↳ Story Reviews
- ↳ Books
- ↳ Audio Novels
- ↳ நிலவே உந்தன் நிழல் நானே
- ↳ Kavi Sowmi
- ↳ காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்- கவி சௌமி
- ↳ Sabareeshwari (SSK)
- ↳ நெயிர்ச்சியின் முழுவல் நீ
- ↳ RS Novels
- ↳ எதிர் துருவங்கள்
- ↳ Sutheeksha Eswar
- ↳ Enai Nanaikum Sarale
- ↳ திசை அறியா பயணமிது
- ↳ Iniya
- ↳ மின்னல் விழியே குட்டித் திமிரே
- ↳ இசையின் மலரானவன்
- ↳ Janani Prasanna
- ↳ காதல் கருவறை
- ↳ Malarvizhi
- ↳ விழி மொழியாள்
- ↳ Kirthika Balan
- ↳ போற போக்கில் ஒரு காதல்
- ↳ Laxmi devi
- ↳ மாலை சூடும் வேளை
- குறு நாவல்
- ↳ Abi Nethra
- ↳ என் கோடையில் மழையானவள்
- ↳ Kavi Sowmi
- ↳ Kanchana Malai
- ↳ காதல் மட்டும் புரிவதில்லை
- ↳ Karthika Maran
- ↳ உயிரே என் உலகமே
- ↳ நல்லவனின் கிறுக்கி
- ↳ Gowry Vicky
- ↳ Chandrika Krishnan
- ↳ மந்திரமென்ன மங்கையே
- ↳ Sahana Harish
- ↳ Malarvizhi
- ↳ உயிரானவளே
- ↳ Rajasekaran Bose
- ↳ காமனின் காதல்
- ↳ Raju Gayu
- ↳ தேன்மொழி
- ↳ Manosha
- ↳ கண்ணாளனின் கண்மணியே
- தமிழ் சிறுகதைகள்
- ↳ Archana Nithyanantham
- ↳ Inba Muthuraj
- ↳ Kanchana Malai
- ↳ Gowry Vicky
- ↳ Sethupathi Viswanathan
- ↳ Nan Ungal Kathiravan
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ பாவை கதைகள்
- ↳ Raju Gayu
- ↳ Renuka Mary
- ↳ Kaayaampoo
- ↳ Venba Ilanthalir
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Kavi Sowmi
- ↳ Saha
- ↳ Sahana Harish
- ↳ Sivaranjani Sivalingam
- ↳ Bhagi
- ↳ Muthu Saraswathi
- ↳ Jothi Ramar
- ↳ Sankari Dayalan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ Bhanurathy Thurairajasingam
- Completed Novel Links
- இருமுனைப் பேனா
- ↳ மாங்கல்யம் தந்துனானே
- ↳ தாய்மையிலும் விஷமுண்டு
- கவிதைகள்
- ↳ Bharathi Kannamma
- ↳ Preethi
- ↳ Rajalakshmi Narayanasamy
- ↳ Raji Prema
- ↳ Sharmi Mohanraj
- ↳ Anjali Suresh
- ↳ Abi Nethra
- ↳ Archana Nithyanantham
- ↳ Kanchana Malai
- ↳ Saha
- ↳ Sethupathi Viswanathan
- ↳ சுஜின் சௌந்தர் ராஜன்
- ↳ காயாம்பூ
- ↳ Bhanurathy Thurairajasingam
- ↳ சித்துவின் வரிகள்
- சமையலறை
- ↳ Anjali Suresh
- பொது அறிவுத் தகவல்கள்
- படித்ததில் பிடித்த கதைகள்
- மருத்துவம்
- மனதோடு
- ↳ மறுபாதி
- ↳ நீயின்றி நானும் இல்லை
- ↳ மாயவனம்
- ↳ அ(இ)வளுக்கென
- ↳ உன்மத்தம் கொண்டேனடி உன்னால்
- ↳ Zaki
- ↳ காதல் போதையடா நீ எனக்கு