என் கண்ணம் பிடித்திழுத்துகண் நேர்பார்த்துகடவுள் மொழியில் கதைக்கிறாய்…
உன் உதட்டசைவிலும்கண்ணொழியிலுமே..கட்டுண்டு போகிறேன்..
ஏதேதோ மொழிந்து,கை தட்டி… சிரிக்கிறாய்..
ஒன்றுமே புரியாவிட்டாலும்உன்னுடன் சேர்ந்து நகைக்கிறேன்
உனக்கேற்ப முகபாவனைகள்கூட்டுகிறேன்..
அதுசரி..,என் கருத்தனைத்தும்உன் குரலில் வியந்து..பேசும் முயற்சியில் மகிழ்ந்துஉன் பாவனைகளில்நெகிழ்ந்திருக்கையில்..நீ என்ன மொழிபேசினாலும்…
நின்...
வீடெங்கும் இறைந்து கிடக்கின்றன
அவனின் கைவரிசையால்…
சில சமையல் பாத்திரங்கள்,
சில விளையாட்டு பொருட்கள்,
சில துவைத்த துணிகள்..
உடன் அழுக்குகள் சிலவும் …. !!
சமையலறை போர்க்களமாய்…
அவன் கைங்கரியத்தில்…
உள்ளத்தினுள்ளே மத்தாப்பு வெடிக்கிறது….அது இதழ்கடையில் புன்னகையாய் மிளிர்கிறது அவளறியாமலே!!
சின்னஞ்சிறு மாற்றங்களும் தப்புவதில்லை…நேசத்தின் வழியாய் பார்க்கும் விழிகளுக்கு!!
எதிர்படும் அனைத்து முகங்களும்அன்பையே தருகின்றன ….அதனாலேயே அவ்விடத்தின் மீதானஅதீத காதல் குறைவதில்லை!!
இரவின் அலுப்பும் அதிகாலை பரபரப்பும் ஓடி ஒளிகின்றன…எட்டி நின்ற நித்திரை சுகமாய் தழுவி தன் ஏக்கம் தீர்த்துக் கொள்கிறது!!
சின்ன சிரிப்பினிலேஎன் சித்தம் கலங்கடித்தாய்!!ஒற்றை அணைப்பினிலேஎன் உயிரை உருக வைத்தாய்!!குட்டி எட்டெடுத்துஎன் பயணம் மாற்றி வைத்தாய்!!பட்டு கரங்களினால்என் வாழ்வில் வண்ணம் சேர்த்தாய்!!அழகு வாயசைத்துஎன் நெஞ்சம் இனிக்க வைத்தாய்!!சொல்லாத வார்த்தைகளால்ஒரு அகராதி படைக்க வைத்தாய்!!கருவண்டு கண்களினால்என் உலகை கவர்ந்திழுத்தாய்!!செய்யும் சேட்டைகளால்என்னை வியக்க வைத்தாய்!!அறியாத செய்கைகளால்என் இருப்பை தெளியவைத்தாய்!!உனை சேயாக ஈன்றெடுத்தேன்..தாய்மையை பரிசளித்தாய்!!கடுந்தவங்கள் புரியவில்லை..கண்ணீரில் கரைந்ததில்லை..எனினும் வரமாய் கைசேர்ந்த்தாய்!!என் உலகை உயிரைஉன்னுள் ஒளித்து வைத்தாய்!!
சூரியன் ஒரு நாள் கூட நீ உறங்கி பார்த்ததில்லை….நிலவிற்கோ அரையிரவு கடக்கும் வரை உடனிருக்கும் தோழி நீ…
சரியான வேளைவில் நீ உண்டு பார்த்ததில்லை நாங்கள்…நன்னாளில் அழகாய் அணிந்துவளைய வரக் கண்டதில்லை ஊரும்..
உழைத்து உழைத்துகாப்பு காச்சிய கைகள்…ஓடி ஓடி பித்தவெடிப்புகளுடன்தேய்ந்து போன கால்கள்…
எங்கள் எதிர்காலம் எண்ணி எண்ணிநிகழ்காலம் தொலைத்தஇளநரை தலை…கனிவை...
மன்னவனவனுடன்மண நாள் கொண்டாடகைகோர்த்து கதை பேசிஇதழோடு இளநகை பூசிநடைபெயின்றேன் … நால்வழிச் சாலையில்..
நடந்து சென்ற பாதையில்பள்ளம் தோண்டிய பாதகர்கள்பணியை சரியாய் செய்யவில்லை…
கல்லும் சரளும் மண்ணும்கலந்து மரண படுக்கையாய் தான்தெரிந்ததென் கண்களுக்கு…
சாலையில் சிறு கல் இருந்தாலும்அதை அகற்றிவிட்டே நகரும் நங்கை நான்…
என்னவாயிற்று.. எனக்கின்று?மன்னவனிடமிருக்கும் கைகளை...
அந்த ஒரு நொடிப்பொழுது, எனக்குள்ஏதோ ஒரு மாற்றம் உண்டானதுஇதுவரை நான் கண்டிராத உலகம்எனக்குள் வசமானது போன்ற உணர்வு
உச்சந்தலையில் நீ கொடுத்த முத்தம் - என் உள் உள்நுணர்வுகளில் பாய்ந்தோடி - என் பதம் தொட்டு-பாதாளம் வரை பெயர்த்தெடுத்து - ஆகாயத்தில் அசுவாசப்படுத்துகிறது - என்னை
எனக்கு தெரியாமல் என்னுள் இருந்த - உன்னை ஒரு நொடி...
தாய் வயிற்றிலிருந்து வெளிவந்துதந்தை மடியில் உறங்கிமண்ணில் தவழ்ந்து விளையாடிமக்களோடு மக்களாக கலந்து நடை பயின்று
குடும்ப சுமைதாங்கி குழந்தை நலம் பேணி கோல் ஊன்றி குடை பிடித்து கொழுக்கம்பு தேடி - மீண்டும்
மண்ணில் தவழ்ந்துமண்ணோடு மண்ணாகபூமித்தாயின் வயிற்றில்“ மீளா உறக்கம்” கொண்டோம் - அதற்குமரணம் என பெயரிட்டோம்.
உண்ண மறந்தேன் ஆடைஉடுக்க மறந்தேன்-கண் இமை மூடாமல்உறங்க மறந்தேன்
உன்னில் என்னை தொலைத்துவிட்டு -செய்வதறியாது உறைந்து நிற்கிறேன் - ஆமாம்? உனக்கும் எனக்கும் என்ன உறவு? - நிச்சயம் உன்னதமானதாகத்தான் இருக்கும்.
நான் இஷ்டப்பட்டுத்தான் இருத்தேன் -உன் இஷ்டமானவளாக - ஏனோ உன் நினைவு அவ்வபோது வந்து என்னை கட்டிபோடுகிறது
சொல்லி புரியவைக்க...
இழப்பதற்கும் பெறுவதற்கும்எதுவும் இல்லை என்னிடம்
எதையும் கொண்டு வரவில்லைஎதையும் கொண்டு செல்லப்போவதில்லை
ஆடம்பரமான வாழ்வு தேவையில்லை உன் அன்பு மட்டும் போதும்
அரண்மனை வாழ் க்கை தேவையில்லை குடிசைக்குள் உன்னோடு கூடி இருந்தாலே போதும்
ஆடி கார் கேட்கவில்லை உன்னோடு கைகோர்த்து காலரா நடந்தாலே போதும்