Home Blog Page 5
காதலை தேடி…. இரண்டாம் அத்தியாயம் போட்டுட்டேன் பிரண்ட்ஸ்… கதை எப்படி இருக்குனு உங்க கருத்துக்களை சொல்லுங்க… மதுரா, காவ்யா இருவரின் வீடும் அருகில் என்பதால் எப்பொழுதும் இருவரும் ஒன்றாக தான் ஸ்கூட்டியில் செல்வர். எப்பொழுதும் ஏதாவது பேசிக்கொண்டு வரும் மதுரா, இன்று மிகவும் அமைதியாக வருவது காவ்யாவை மிகவும் யோசிக்க வைத்தது. தன்...
வ‌ணக்க‌ம் தோழிக‌ளே!!! நான் தேவ‌ம‌தி. இது என்னுடைய‌ இர‌ண்டாவ‌து க‌தை. நீண்ட‌ இடைவெளிக்கு பின் எழுதுகிறேன். இந்த கதை நான்கு தோழிகளையும், அவர்களின் காதலையும் மையப்படுத்தி கொஞ்சம் நிஜமும் கொஞ்சம் கற்பனையும் சேர்த்து தரவிருக்கிறேன். கதையின் போக்கில் இவர்களை பற்றியும், இவர்களின் காதலின் தேடலையும், தேடலின் வெற்றி, தோல்வியையும் நாம் தெரிந்து கொள்ளலாம்.
" என்ன டி ..என்ன பண்ணலான்னு இருக்க ?? " என்று கேட்ட சுபியை " இதுல பண்றதுக்கு என்ன இருக்கு ……. எப்படி நடக்குமோ நடக்கட்டும் …ஆனா ….நான் எங்க அப்பா அம்மாவ மீறி கண்டிப்பா எதுவும் பண்ண மாட்டேன் ….இன்னும் 1 வருஷத்துக்கு….." என்றாள் சக்தி …." என்னடி ..இப்படி சொல்ற ???" என்று வினவினாள் …
" அம்மா சின்னு ….. ரெடி ஆகிட்டியா ??? " என்று கேட்டபடியே மகளை தேடி அவளது ரூமினுள்ளே வந்தார் செண்பகம்மாள் …….. செண்பகம் : சீக்கிரம் ரெடி ஆகு ..இன்னைக்கு ஏதோ மீட்டிங்க்கு சென்னை போறதா சொன்ன ….. எத்தனை மணிக்கு ட்ரெயின் ????" சின்னு : 11 மணிக்கு தான் ட்ரெயின் …..
நேரம் காலை பத்து மணியை நெருங்கி கொண்டு இருக்க பரபரப்பாக காணப்பட்டது அந்த வீடு. பத்து செண்ட் இடத்தை அந்த வீடு விழுங்கி இருக்க உள்ளேயும்,வெளியேயும் அதன் பிரம்மாண்டம் பார்த்தவர்களை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும்.அதே போல முன்பு காலி இடத்தில் இருக்கும் வட்டவடிவிலான பூந்தோட்டம் இதை சுற்றியபடி கார் செல்ல வழி வரிசையாக நான்கு கார்கள் நிற்பதற்காக நிறுவப்பட்டிருக்கும் போர்ட்டிகோ எதுவுமே அந்த வீட்டின்...
அந்த மோதிரம் ராமினுடையது என்ற ஜீவாவின் பதிலில் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் விஷ்ணு. “ டேய் …டேய் விஷ்ணு…என்னடா ஆச்சு … ஏன் இப்படி டென்ஸ்டா இருக்க? சொன்னாதானே தெரியும்.சொல்லுடா விஷ்ணு …” என விஷ்ணுவை உலுக்கியபடி கிட்டத்தட்ட கத்தியேவிட்டான் ஜீவா . ஜீவாவின் சத்தத்தில் தன்னிலைக்கு வந்த விஷ்ணு “ ஒன்னும் இல்லைடா “ என்றவாறு அவ்விடத்திலிருந்து நகர எத்தனித்தான்....
காரை காளையென விரட்டியவன் சற்று நேரத்திற்க்கெல்லாம் காலையில் தான் சென்ற அதே கோவிலுக்கு செல்லும் வழியில் செலுத்திக்கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் அக்காட்டுப்பிரதேசத்தினில் காரை நிறுத்தி அக்கோவில் உள்ள திசையில் சென்றான் . அந்த நேரத்தில் அப்பிராந்தியத்தில் மையம் கொண்டிருந்த மையிருட்டு சற்று அச்சத்தைக்கொடுத்தாலும் அதையெல்லாவற்றையும் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு அந்த கோவிலை நெருங்கினான் .
அறையையே நோட்டம் விட்டுக்கொண்டிருந்த விஷ்ணு ஒரு இடத்தைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் அப்படியே நின்றான் .  அவன் பக்கத்தில் நின்றிருந்த வேதாவும் அவன் பார்வை சென்ற திக்கை நோக்கினாள் .அந்த இடத்தில் உள்ளங்கை அகலத்தில் கரிய நிறத்தில் ஏதோ ஒன்று அசைந்தபடி இருந்தது . அதைக்கண்டவுடன் பயத்தில் விஷ்ணுவின் கையை கெட்டியாகப்பிடித்துக்கொண்டாள் .
சூரியன் ஆரஞ்சு வண்ண பந்து போல தன் உருவத்தை மாற்றிக்கொண்டு அஸ்தமனமாகப்போகும் அந்த மாலை வேளையில் ராமின் கார் அந்த சாலையில் வழுக்கிக்கொண்டு சென்றுகொண்டிருந்தது . காரை ராம் செலுத்திக்கொண்டிருக்க அவன் அருகில் உள்ள இருக்கையில் ராஜீவ் அமர்ந்திருக்க விஷ்ணுவும் வேதாவும் பின் இருக்கையை ஆக்ரமித்திருந்தனர் . நாள் முழுவதும் அந்த சுற்றுலாத்தலத்தினை நன்றாக சுற்றிப்பார்த்ததில் சிறிது களைத்திருந்தனர் . ஆனாலும்...
காலைக்கதிரவன் தன் மரகத மஞ்சள் நிற கரங்களை நீட்டி இவ்வுலக உயிர்களை எல்லாம் தன் இளஞ்சூட்டால் ஆரத்தழுவியிருந்த அந்த அழகான விடியற்காலைப் பொழுதில் விஷ்ணு தனதறையில் ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தான் . ஒரு சில நாட்களாக சரியான உறக்கம் இன்றி தவித்தவனுக்கு இப்பொழுதுதான் நிம்மதியான தூக்கம் கிட்டியது . நேற்றைய தினத்தின் இரவில் வேதாவைச்சந்தித்துவிட்டு தனதறைக்கு வந்தவன் அன்றைய தினம் தன்...

என்னுடைய forumக்கு செல்ல கீழே உள்ள லிங்கை பயன்படுத்தவும்.
https://www.madhunovels.com/tamilpens/index.php?sid=47ebd668dcef775e3b71566bee69a8f7

X
Don`t copy text!