அனைத்துக் காட்சிகளும் மெல்ல மெல்ல விஷ்ணுவின் கண்முன்னே தெளிவற்ற காட்சிகளாகி மறைந்தன . உடலில் மின்சாரம் பாய்ந்தது போல உணர்ந்த விஷ்ணு சட்டென தன் கண்களைத்திறந்தான் . தன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தவன் தான் இருக்கும் இடத்தை ஒருமுறை சுற்றும் முற்றும் பார்த்தான் . தான் இன்னும் குகைக்குள்தான் இருக்கிறோம் என்று தெளிந்தவன் தான் இதுவரைக் கண்டது அனைத்தும் என்னவென்று ஒரு கணம் யோசித்தான் ....
நாம் இப்பொழுது விஷ்ணுவர்மனை சந்திக்கும் இவ்வேளையில் அவன் அந்த ராஜாங்கத்தின் சிறைச்சாலையின் ஒரு தனி அறையில் வேதனையே உருவாக விட்டத்தைப் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் . அவன் முகத்தில் எப்பொழுதும் தவழும் அந்த புன்னகை அவனுக்கும் தனக்கும் பூர்வஜென்ம பகை உள்ளதுபோல் அவனை விட்டு தொலைதூரம் சென்றுவிட்டிருந்தது . எப்பொழுதும் ஜ்வாஜல்யமாக திகழும் முகத்திலோ துயரத்தின் சாயலே ஊற்றெடுத்திருந்தது . அவன் மனமோ அரசவையினில் இன்று காலை...
எப்படியாவது அரியனையை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணம் வளவனின் மனதினில் வேரூன்றியது . அதற்க்காக எந்த எல்லைக்கும் செல்ல அவன் தயாராக இருந்தான் . நேரடியாக மோதி இதை சாதிக்க முடியாது என்பதை நன்றாக உணர்ந்த அவன் ஒரு சதித்திட்டத்தை தீட்ட ஆரம்பித்தான் .
அவனின் முதல் எதிரி அரசன் ராஜசிம்மன்தான் என்றாலும் அவன் அருகில் கூட யாரையும் நெருங்கவிடாமல் அரசனை...
அந்த மலைக்குகையில் சந்தித்த அந்த சந்நியாசி சொன்னபடி செய்ய ஆரம்பித்தான் விஷ்ணு . அவன் மட்டும் சாதாரண நிலையில் இருந்திருந்தால் அவர் கூறியதைக் கேட்டு கண்மண் தெரியாமல் அதை ஆராயாமல் நம்பியிருக்க மாட்டான் . ஆனால் இப்பொழுதோ அவன் கொண்டிருந்த மன சஞ்சலத்திற்க்கு அவர் சொன்னது உண்மையா ? ? என ஆராய கூடிய மனநிலையில் விஷ்ணு இல்லை.
கண்ணை மூடி...
ராமின் தந்தையுடன் வந்திருக்கும் நபரைப்பார்த்தவுடன் விஷ்ணுவிற்க்கு வாயடைத்துப்போனது. தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போன்று ஆனது. இருக்காதா பின்னே !. தான் கனவில் பார்த்த அதே நபர் நேரில் வந்தால் பாவம் அவன் என்ன செய்வான். தன்னிச்சையாகவே அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது….. ஷாக்சாத் அவன் கனவில் வந்த ராஜசிம்மனின் தோற்றத்திலேயே இருந்தான் . ஆனால் இப்பொழுது நவநாகரீக உடையில் இருந்தான் .
தனக்கு நேர்ந்த வித்யாசமான அனுபவத்தினால் சற்று சலனத்துடன் அவனறையில் கண்மூடிப்படுத்திருந்தான் விஷ்ணு .
சம்பந்தமில்லாமல் ஏன் இக்கனவு தன்னைத் தொல்லைப்படுத்துகிறது என்ற சிந்தனையில் ஆழ்ந்திருந்தான் . வாசலில் ஏதோ நிழலாடுவதுபோன்ற பிரமை ஏற்படவே தன் சிந்தனையிலிருந்து விடுபட்டு வாயிலை நோக்கினான்
“ ஹலோ விஷ்ணு …. என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க …. இப்போ ஹெல்த் பரவாயில்லையா… என்றபடி...
மன்னனுக்கு அருகில் நெற்றியில் பிறைநிலா திலகம் தரித்து முறுக்கிய மீசையுடனும் தோள்வரை வளர்ந்த கருமையான் கார்குழலுடனும் பட்டாடை உடுத்தி இடுப்புக்கச்சையில் வாளுடன் கம்பீரமாகவும் மிடுக்குடனும் நின்றிருந்தான் விஷ்ணு.
அப்போது அரசவையில் மாமன்னர் ராஜசிம்மன் வாழ்க !வாழ்க ! சேனாதிபதி விஷ்ணுவர்மர் வாழ்க வாழ்க என்ற வாழ்த்தொலிகள் எழுந்து விண்ணை எட்டின.
அப்போது சிங்காதனத்தில் அமர்ந்திருந்த ராஜசிம்மன் அவையோரினைப்பார்த்து...
மூர்த்தி விஷ்ணுவிடம் அக்குன்றைப்பற்றி கூறிமுடித்தவுடன் விஷ்ணுவின் அறையிலிருந்து சென்றார். அவர் சென்றவுடன் “இவர் சொன்னது உண்மைதானா? ஆனால் அது உண்மை இல்லைன்னு என் மனசு சொல்லுதே! எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு ஆர்வம் அந்த இடத்தைப்பற்றி தெரிஞ்ச்சிக்கிறதுல.அப்புறம் அந்த பாழாய்ப்போன கனவு வேற” என நினைத்துக்கொண்டிருந்தான்.
“சரி கொஞ்ச நேரம் மொட்டை மாடில உலாத்திட்டு வரலாம் அப்போதான் கொஞ்சமாவது ரிலாக்ஸ்டா இருக்கும்...
மூர்த்தி அந்த கதையை கூற ஆரம்பித்த வேளையில் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராய் "தம்பி நான் அந்த கதையை உங்களுக்கு சாயந்தரம் வந்து சொல்றேன் .இப்போ அய்யா என்னை தென்னைமண்டிக்கு போய் அதோட வரவு செலவு கணக்கை எடுத்துட்டு வர சொன்னாரு.உங்க எல்லாருக்கும் டீ கொடுத்துட்டு அப்புறம் அங்க போகலாம்னு வந்தேன்.இப்பொ போகலைன்னா லேட் ஆகிடும் தம்பி.அதனால நான் இப்போ கிளம்பறேன் "என சொல்லி அங்கிருந்து...
அந்த சப்தம் சாளரத்தின் வழியாகத்தான் வருகிறது எற ஊகித்த விஷ்ணு சாளரத்தைநோக்கிச்சென்றான் அங்கே கிழிந்த ஆடைகளும் பல வருடங்களாக சவரத்திற்கு பழக்கப்பட்டிருக்காத நீண்ட தாடியுடனும் பார்ப்பதற்கு பைத்தியக்காரத் தோற்றத்திலிருந்த ஒருவன் இவனுடைய சாளரத்தையே வெறித்து நோக்கியவாறு “ வந்துட்டியா… நீ வந்துட்டியா… காலம் உன்னை கூட்டிட்டு வந்துடுச்சா…. உனக்காகதான் நான் காத்துகிட்டு இருந்தேன் … பிறவியின் நோக்கத்தை நிறைவேற்ற வந்துட்டியா “ என்றவாறு உளறிக்கொண்டிருநதான் ....