பகுதி 12
கேஷவின் அலுவலகம்.
காலை முதல் மாலை வரை இழுத்தடித்த அனைத்து முக்கிய வேலைகளையும் கருமமே கண்ணாய் கொண்டு ஆர்டர்களின் வரவு மற்றும் ஏற்றுமதி ஆனது என அத்தனையும் லேப்டாப்களில் சரிபார்த்தவனின் கண்களுக்கு மேலும் பேக்டரியில் இருக்கும் சிக்கல் கண்கூடாய் தெரிய ஆரம்பித்தது…
தொழிற்சாலையில் மொத்தம் எட்டு பிரிவுகளில் இயங்கிக்கொண்டிருக்கும் புரோடக்ஷனில்...
மாலை சூரியன் தன் உலாவினை நிறுத்தியதை உணர்த்தும் விதம் வெளிச்சம் மங்கி இருள் சூழந்து வர தன் அறையில் இருக்கும் வீணையை வாசித்துக் கொண்டிருந்தாள் தியா.
கானல் ஆகுமோகாரிகை கனவுதாகம் தீர்க்குமோகோடையின் நிலவு
தொலைவிலே வெளிச்சம்…ம்ம்…தனிமையில் உருகும் அனிச்சம்கனவு தான் இதுவும்கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்தினம் வருதே அச்சம்
எனும் பாடல் வரிகளை...
புத்தம் புதுகாலை பொன்னிறவேளை என் வாழ்விலேதினந்தோறும் தோன்றும்சுகராகம் கேட்கும்எந்நாளும் ஆனந்தம்…..
என்ற பாட்டு சத்தம் ஏதோ ஒரு தெலைகாட்சியில் மெல்லிய வருடலாய் காற்றில் மிதந்து வர
கையில் பைலுடன் மாடிபடிகளில் கேஷவ் இறங்கி வரும் அரவம் கேட்டு பூஜை அறையில் இருந்து வெளிபட்ட நாரயணி "கிளம்பிட்டியா கேஷவ்" என்றார்.
"ம்… கிளம்பிட்டே இருக்கேன்...
மேற்கு தொடர்ச்சிமலைகளின் அரசி என பெயர்கொண்ட ஊட்டியில் இயற்கை அன்னையின் மடியில் தவழும் மழலையாய் விளங்கும் இடம் தான் மசினங்குடி… முதுமலை சருக்கத்தில் இடம்பெறும் இந்த இடம் ஓங்கி வளர்ந்த மரங்களும், பசுமையான காடுகளையும் சலசலவென ஓடும் ஓடைகளையும், பலவகையான வன விலங்குகளையும் , தன்னகத்தே கொண்ட இதில் சில தனியார் சுற்றுலாதளங்களும் இயங்கிக்கொண்டிருந்தது. இதன் வனப்பு எந்த அளவிற்கு மனதிற்கு மகிழ்ச்சியும், கண்களுக்கு குளிர்ச்சியும்...
மஞ்சள் வெயில் மாலையிலே… மெல்ல மெல்ல இருளுதே.… பளிச்சிடும்விளக்குகள் பகல் போல் காட்டுதே……
என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப அந்திவானம் தன் செந்நிறஆடையை அணியமாணிக்கத்தின் இல்லத்தில் பெண்பார்க்கும் வைபவம் தடபுடலாய்அமர்க்களப்பட்டது.
"கந்தா இந்த சேர்லாம் அந்த பக்கம் போட்டுட்டு கர்ட்டன்ஸ் மாத்திடு" என்றுமாணிக்கத்தின் குரல் ஒலிக்க
"என்னங்க…....
கால கடிகாரம் யாருக்கும் நிற்காமல் தங்கள் வேலையை செவ்வனே செய்ய நாட்கள் நிமிடங்காளாய் கரைந்தோடியது…. இதோ அதோவென ஜெய் ஊருக்கு புறப்படும் நாளும் நெருங்க கழுத்தை நெறிக்கும் கடைசி நிமிட வேலைகளை செய்து கொண்டிருந்தான் அவன்.
லேப்டாப்பில் தம்பிக்கு தெரியவேண்டியமுக்கிய தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாக பதிந்து வைத்தவன் அதை கடவுச்சொல் கொண்டு பத்திரபடுத்தியும் வைத்தான்.
மலை முகடுகளிலும், அந்திவானத்திலும் கண்ணாமூச்சி ஆடிய கதிரவனை எவரும் கண்டுபிடிக்காமல் போக நான் இருக்கிறேன் என்று பறைசாற்றியபடி செங்கதிர்களை வீசி உலா வந்தான் காலை கதிரவன்.
வெள்ளிக்கிழமை மங்களம் பொங்கமீரா ஹெர்பல் சீக்காய் கொண்டு நீராடு பெண்ணே நீராடு
என்று சிகைக்காய் விளம்பர பாடல் பாடியபடி தலையை துவட்டி கொண்டிருந்தாள் கவி....
காபி ஷாப்பிலிருந்து வந்தவளுக்கு மனது ஒரு மட்டுக்குள் அடங்கவில்லை… "யாருடி இவன் காலைல இருந்து வெறுப்பேத்திக்கிட்டே இருக்கான். நல்ல சண்ட சேவல போல சிலுப்பிக்கிட்டே வர்றான்…. மூஞ்சியும் முகரையையும் பாரு நல்லா திட்டி நாலு காட்டு காட்டி இருக்கனும் … ச்சே… அதுக்குள்ள இவளுங்க இழுத்து வந்துட்டாளுங்க" என்று சிநேகிதிகளை குமைந்து உள்ளுக்குள் உழன்று கொண்டிருந்தாள் கவி
நெடுந்துர பயணம். மனதை கொள்ளை கொள்ளும் பசுமையின் பிறப்பிடம். புற்களின் நுனியில் இருந்த பனித்துளியும் மாயமாகி இருந்தது கதிரவனின் உபயத்தால், மனதையும் உடலையும் தழுவி செல்லும் இதமான காற்று, இவற்றிற்க்கு மத்தியில் வண்டியை நிருத்தியிருந்தான் கேஷவ்.
அவனின் திடமான உருவத்திற்க்கும், ஆண்மையின் மிடுக்குடன் ஆறடிக்கும் குறையாது இருந்தவனின் மாநிறத்திற்க்கும், எடுப்பாய் நீலநிறத்தில் டீ ஷர்ட்டும் அதற்க்கு தோதாய் கருமை நிற ஜீன்ஸ்...
மஞ்சுளாவை பார்த்த அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்ட அந்த கருப்பு உருவம் திருதிருவென முழித்தபடி பின்னாள் நின்ற தியாவை பார்க்க.
மஞ்சுளாவின் பின்னாள் நின்றிருந்த தியா போச்சி போச்சி மாட்டின என்று அவளுக்கு புரிய வைக்க பரதம் ஆடிக்கொண்டிருந்தாள்.
அந்த உருவத்தின் பார்வை செல்லும் திசையை கவனித்த மஞ்சுளா தலை முதல்...