கோயம்பத்தூர்காதல்-2பசுமை மாறாத அந்த கரடுமுரடான ஊட்டி மலை பாதை சரிவுகளை அனாயசமாய் கடந்து கோயம்பத்தூர் மாநகரில் முக்கிய வீதியில் அமைந்திருந்த பெரிய காம்பவுண்ட் கிரில் கேட்டுகளின் முன்பு பைக்கை நிறுத்தினான் . நல்ல உயரம் அளவான உடல்வாகு மாநிறம் இப்படியே போனால் காவல் துறையில் அவனுக்கு வேலை நிச்சயம் அத்தனை அம்சமும் கொண்டவன் கேஷவ். ராஜராமன் ஆதிநாரயணியின் இளைய மகன். பைக்கை விட்டுவிட்டு வேகமாக கேட்டை...
காதல்.1☺️☺️அதிகாலைவேளை மணி ஐந்தை நெருங்கி கொண்டிருக்க பறவைகளின் ஒலி ரீங்காரமிட கருப்பு உருவம் ஒன்று பதுங்கி பதுங்கி காம்பவுண்ட் கேட்டை சத்தமில்லாமல் திறந்து வண்டியை நிறுத்தி விட்டுவிட்டு சுற்றிலும் பார்வையால் நோட்டம் விட்டது. எவரும் இல்லை என்று ஊர்ஜித படுத்திக்கொண்டு வீட்டின் பக்கவாட்டு சுவர்பக்கம் போய் மறைந்து கொண்டு சுவற்றில் தன் உடலை மறைத்து தலையை மட்டும் வெளியே எட்டி எட்டி பார்த்தது.
காரை விட்டு இறங்கியவனின் பிம்பத்தை கண்டவளின் சப்த நாடியும் அடங்கியது இதயம் ஒரு நிமிடம் இயக்கத்தை நிறுத்தியதைப் போல் நெஞ்சடைத்தது. மூளை தன் செயல் திறனை இழந்து ஸ்தம்பித்தது. உடல் தடுமாறியது . தன் கண்களை அழுந்த மூடி ஒரு நிமிடம் தன் நிலமையை சீராக்கியவள் " இவன் இங்கு எப்படி???…இவனுடைய பெயரையோ இல்லை இவன் நிறுவனத்தின் பெயரையோ எங்கும்...
வைஷூ மும்பைக்கு மாற்றலாகி இன்றோடு ஒரு வாரம் ஆகிறது .
வானதி இங்கு வந்தது முதல் இரண்டு நாள் ஒரே சோகமயம் தான் தான்யாவை விட்டு வந்ததில்.
ஹைதராபாதிலிருந்து புறப்படட் சமயம் ஆரம்பித்த அழுகை ஏர்போர்ட் வரை நீடித்தது . தான்யா வசுதாவின் சமதானமோ அல்லது வைஷூ உஷாவின் சமதானமோ எடுபட வில்லை . அழுதழுது ஒருகட்டத்தில்...
பகுதி-7மூன்று தலை முறைகளாக ஜவுளி துறையில் வேறுன்றி இன்று ஆலமரமாக வளர்ந்து நிற்கும் சாம்ராஜ்யத்தின் முடி சூடா மன்னனாக இருக்கும் RK TEXTILES INDUSTRY யின் MD கௌஷிக் தனது உயர்ரக நவின வெளிநாட்டு காரில் வந்து இறங்கினான். அவன் வேகத்துக்கு காற்றையும் உதாரணமாக கூற முடியாது. வாசலில் வந்து இறங்கியவனை எதிர்கொண்டான் ராகுல் . கௌஷிகின் PA . கௌஷிக் எள் என்று சொல்லி...
பகுதி-6தோழிகள் இருவரும் பிரபல ஷாப்பிங் மாலிற்க்கு சென்றனர். தங்களுக்கு தேவையான உடைகள் மற்றும் அதற்கு தோதான மேட்ச்சிங் நகை வகைகளை வாங்கியவர்கள் தங்களை தொடர்ந்து வரும் விமலை கவனிக்கவில்லை . அது அவனுக்கு சாதகமாக மாறி நல்லவனாக சித்தரித்தது விதியின் விளையாட்டா அல்லது தோழிகள் இருவரது எதிர்கால வாழ்க்கையில் சந்திக்கவிருக்கும் சோதனையின் துவக்கமா என்பதனை யார் அறிவர்."வைஷூ பில் கவுண்டர் ரஷ்ஷா இருக்குடி… நீ போய்...
அன்று
மாசற்ற மனத்துடனேஶ்ரீ ராமனைப் பாடவாயுபுத்ரனே வணங்கினேன்ஆற்றலும் ஞானமும் வரமும் தரவந்தருள்வாய் ஶ்ரீஹனுமானே
என்று பூஜை அறையில் அனுமந்த சாலிசா பாடிக்கொண்டு கண்களை மூடி பூஜையில் ஈடுபடிருந்த லலிதாவிற்கு மாடியிலிருந்து ஹைபிட்சில் ஒலித்த நாக்கு மூக்கா பாடல் காதை கிழித்தது.ஒரு நிமிடம் கண் திறந்து மாடியை நோக்கியவர் மறுபடியும் கண்களை மூடி அனுமனை மனதினில் நினைத்து பிரார்த்தித்தார்.
பகுதி- 4
வார முதல் நாள் காலை நேர பரப்பரப்புடன் அலுவலகத்துக்கு தயாராகி கொண்டிருந்தாள் வைஷூ" வைஷூ லஞ்ச்சுக்கு வத்த குழம்பும் கோஸ் கூட்டும் வச்சி இருக்கேன்".உஷா" சரிங்க அத்த குல்லு தூங்கறா இன்னும் எழுந்துக்கல அவ எழுந்ததும் ஏதாவது சேட்ட பண்ணா டேபிள் மேல டிராயிங் புக் கிரயான்ஸ் வெச்சி இருக்கேன் சும்மா வம்பு வலத்தினா அம்மா வரைய சொன்னான்னு...
பகுதி 3
ஶ்ரீ யின் பிரகாசமான முகத்தை கண்டு கௌஷிக்கும் சௌந்தரும் என்னவென்று யூகித்துவாறு ஒருவருக்கு ஒருவர் நமட்டு சிரிப்புடன்.
"நாளைக்கு காலைல 6 மணிக்கெல்லாம் மண்டபத்துல இருக்கனும் டா…..ஆமா உன் போன் எங்க ? ஒன் ஹவரா டிரை பண்றேன் என்கேஜிடுன்னு வருது" என்று சௌந்தர் ஒற்றை புருவம் உயர்த்தினான் கண்களில் குறும்புடன்.
சென்னை
"ஹலோ ஶ்ரீ எங்கப்பா இருக்க?"ஶ்ரீயின் அன்னை
"ஹலோ ….அம்மா நான் ஏர்போட்லதான் இருக்கேன். டிராபிக்ல மாட்டிக்கிட்டேன். இப்போதான் வந்தேன் மா".என்றான் ஶ்ரீ என்கின்ற ஶ்ரீதரன்
"ஓ… அப்படியா சரிப்பா…."
" என்னமா போன் பண்ணியிருக்கிங்க"
" ஶ்ரீ உனக்கு டிரஸ் ரெடியாகிடுச்சின்னு தம்பிக்கு...