ஹாய் மக்களே ,'உன்மத்தம் கொண்டேனடி உன்னால்' கதையை kindleல போட்டாச்சு. படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க. ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையா வச்சு எழுதி இருக்கேன். போட்டிக்காக எழுதினது மக்களே ..ஸ்டார் ரேட்டிங் கொடுக்க மறக்காதீங்க மக்கா.
ப்ரியா,ரவி,சக்தி , கிஷோர், மகேசன்,கற்பகம்,சபேசன்,அல்லி,கனகம்,ஜெயா.... இப்படி எல்லா கதாபாத்திரங்களும் உங்க மனசை கவர்வாங்கனு நம்புறேன். படிச்சுட்டு...
ஹாய் மக்களே,
ஒரு சந்தோஷமான செய்தியோட வந்து இருக்கேன்.என்னுடைய கதை 'வானவில் சிற்பமே' நாளை முதல் பிரியா புத்தக நிலையத்தில் நீங்க வாங்கிக்கலாம்.
பிரபஞ்சன் & சங்கமித்ராவை யாரும் மறந்து இருக்க மாட்டீங்கன்னு நினைக்கிறேன்.போலீஸ் மாமனுக்கு இன்ட்ரோ வேணுமா என்ன☺️..
ஒரு வருடத்திற்கும் மேலான இடைவெளியில்...
ஹாய் மக்களே...ஏற்கனவே உங்ககிட்டே சொன்ன மாதிரி இந்த கதையை முடிச்சுட்டேன்.இந்த கதையை kindle லில் மட்டும் தான் படிக்க முடியும்.வேற எங்கேயும் இருக்காது.
சங்கரபாண்டியனும் , தாமரையும் நிச்சயம் உங்களை கவர்வார்கள் என்றே நம்புகிறேன்.கிராமத்துப் பின்னணியில் ஒரு அழகான கதை. என்னுடைய பாணியில்...
காதலாய்... கவிதையாய் ஒரு கதை...படிச்சுட்டு உங்க...
ஹாய் மக்களே handmade சோப் எப்படி செய்யுறதுன்னு நிறைய பேர் கேட்டு இருந்தீங்க.... எனக்குத் தெரிஞ்சதை சொல்றேன்.
இரவு முழுவதும் அவனும் தூங்கவில்லை. மற்றவர்களையும் அவன் தூங்க விடவில்லை. அவனுக்கும் வானதிக்கும் குறிக்கப்பட்ட முஹூர்த்தம் ஏழு மணிக்கு…இந்நேரம் வானதி அருகில் இருந்து இருந்தால் அவனது மனைவி ஆகி இருப்பாள்.அந்த எண்ணமே அவனது ஆத்திரத்தை அதிகப்படுத்தியது.
‘எவ்வளவு ஆசையாக இருந்தேன்…எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தேன்…கடைசி நேரத்தில் இப்படி நடந்து விட்டதே…அவனிடம் மாட்டிக்...
ஹாய் மக்களே எல்லாரும் ரெடியா இருக்கீங்களா புது சைட்டை பார்க்க...புது தளம் தயாரா இருக்கு.எல்லாரும் போய் பார்த்துட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
register செய்ய உங்க fb அல்லது ஜிமெயில் ஐடி கொடுத்தா மட்டும் போதும்....வேற எதுவும் வேண்டாம்.(முக்கியமா confirmation மெயில் தேவை இல்லை... ஜஸ்ட் ஒன் கிளிக் போதும்.கதைகளை படிக்க register செய்ய...
ஹாய் மக்களே ,
இன்று ஒருநாள் மட்டும் என்னுடைய சைட்டில் எந்த ud யும் கிடையாது.
எழுத வர சொல்லி எழுத்தாளர்களை அன்புடன் அழைத்து விட்டேன்.ஆனால் புதிதாக நட்புகள் உள்ளே வந்ததும் சில பல மாற்றங்கள் சைட்டில் செய்ய முற்படும் பொழுது தான் சில பிரச்சினைகள் தலை தூக்கியது.
சிலரால் register செய்யவே...
சமீபத்தில் காற்றின் மொழி திரைப்படம் பார்த்தேன்.என்னை கொஞ்சம் அல்ல நிறையவே அசைத்துப் பார்த்து விட்டது அந்தப் படம்.
அப்பா...என்ன மாதிரியான நடிப்பு ஜோதிகா அவர்களுடையது...ஒவ்வொரு சீனிலும் அசத்தி இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
வேலைக்குப் போக விருப்பப் படும் ஒரு குடும்பத் தலைவியின் நிலையை இதை விட அழகாக சொல்லி விட முடியுமா?
இத்தனைக்கும் அவர் ஒன்றும் பகல் முழுக்க வேலைக்கு போகவில்லை.இரவில் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே அவருக்கே...
என் கற்பனைகளை முடுக்கி விட உன் குரலோசை போதும்.
தடுத்து நிறுத்த உன் ஒற்றை கண் அசைவு போதும்.
என் தொடக்கமும் நீயே
முடிவும் நீயே
கண்களால் நீ பேசிடும் தருணங்களில் தான் குழம்பிப் போகிறேன் நான்
இப்பொழுது தொடங்கட்டுமா...அல்லது நிறுத்தட்டுமா?
புளி...இதைப் பத்தி நான் சொல்லித் தான் உங்களுக்கு தெரியணுமா?வீட்டில் சமைக்கும் பெண்களுக்கும் சரி,சிறு வயதில் ரோட்டோரமாக புளியம்பழம் பறித்து திண்ணும் ஆண்களுக்கும் சரி நன்றாகவே தெரிந்து இருக்கும் இதைப் பற்றி.பார்த்தவுடனே நாக்கில் ஊற வைக்கும் அதன் புளிப்பு சுவைக்கு நம்மில் பெரும்பாலானோர் அடிமை...(அதில் முதல் அடிமை நான் தானுங்கோ)
இந்த மரத்தில் இல்லை,பூ,காய்,கனி,பட்டை,விதை ஆகியவை மருத்துவ பயன் நிறைந்தது.இதோட மருத்துவ பண்புகள் என்ன என்பதை பார்க்கலாம்.
தளிரை துவையல் அரைத்து சாப்பிட...