ஹாய் மக்களே இன்னைக்கு நாம பார்க்க போற மூலிகை ஈழத்தலரி.பேர் ரொம்ப வித்தியாசமா இருக்கு இல்லையா? ஆனா இந்த மூலிகை நீங்க அடிக்கடி பார்த்து இருப்பீங்க.நிறைய பேர் வீட்டில இதை வெறும் அழகுக்காக வளர்த்துக்கிட்டு இருக்காங்க.ஆனா அவங்களுக்கு தெரியாது இதோட மருத்துவ குணங்களைப் பத்தி.
பொதுவா சித்த மருத்துவத்தில ஒரு செடி/மரத்தோட எல்லா பாகங்களும் மருந்துக்கு பயன்படுத்துறது ரொம்பவே கம்மி…அந்த வகையில் இந்த மரத்தோட எல்லா பாகங்களையும் நீங்க மருந்துக்கு பயன்படுத்தலாம்.இந்த வகை பொதுவா வெள்ளையும் மஞ்சளும் கலந்த நிறத்தில் பூ பூக்கும்.இப்போ இதோட மருத்துவ பயன்களைப் பார்க்கலாம்.
பட்டையை நல்ல நைசாக அரிது கட்டிகளுக்கு பற்று போட்டு வர கட்டிகள் உடைந்து ஆறும்.
மரத்தின் பாலை மூட்டு வலி உள்ள இடங்களில் தடவி வர வலி குறைந்து நோய் குணமாகும்.
வேர்பட்டையை தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சி காலையில் மட்டும் 50மி.லி குடித்து வர சீழ் கலந்து வெளியேறும் சிறுநீர் போன்றவை குணமாகும்.
மருத்துவம் தொடரும்…
Facebook Comments Box
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1